பதிவு செய்த நாள்
30 நவ2021
19:49
புதுடில்லி:மும்பையைச் சேர்ந்த, நிதிச் சேவைகளை வழங்கி வரும், ‘ஆனந்த் ரதி’ குழுமத்தைச் சேர்ந்த, ‘ஆனந்த் ரதி வெல்த்’ நிறுவனம், நாளை, ஐ.பி.ஓ., எனும் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது.
புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதை அடுத்து, ஒரு பங்கின் விலை 530 – 550 ரூபாய் என நிர்ணயித்துள்ளதாக நேற்று அறிவித்துள்ளது.இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக 660 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும்
இந்த பங்கு வெளியீடு, நாளை துவங்கி, 6ம் தேதியுடன் முடிவடைகிறது.பங்கு வெளியீட்டின் போது, முழுக்க முழுக்க நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 1.2 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளது.முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 27 பங்குகள் அல்லது, அதன் மடங்குகளில் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம், கடந்த 2002 ம் ஆண்டு, நிதிச் சேவை வணிகத்தை துவங்கியது. மியூச்சுவல் பண்டு வினியோகஸ்தராகவும் இந்நிறுவனம் தன்னை பதிவு செய்துகொண்டுள்ளது.இதற்கு முன், கடந்த 2018ல், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக ‘செபி’க்கு விண்ணப்பித்து, அனுமதியும் பெற்ற நிலையில், அம்முயற்சியை திரும்ப பெற்றுக்கொண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|