பதிவு செய்த நாள்
30 நவ2021
19:53
புதுடில்லி:பொதுத்துறையை சேர்ந்த ‘சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ்’ எனும் பொறியியல் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை, 210 கோடி ரூபாய்க்கு, ‘நந்தால் பைனான்ஸ் மற்றும் லீசிங்’ நிறுவனத்துக்கு விற்பனை செய்ய, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
கடந்த 1974ம் ஆண்டு, இந்நிறுவனம் மத்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் துவங்கப்பட்டது. இந்நிறுவனம், ‘சோலார் போட்டோவோல்டிக்’ பிரிவில் முன்னோடியான நிறுவனமாகும். இது சம்பந்தமான தொழில்நுட்பத்தை, அதன் சொந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் வாயிலாகவே உருவாக்கி உள்ளது.
மேலும், ரயில்கள் பாதுகாப்பாக ஓடுவதற்கான ‘ஆக்சில் கவுன்டர் சிஸ்டம்’ எனும் தொழில் நுட்பத்தையும் உருவாக்கியது.இந்நிலையில், இதை தனியார்மயமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.இதையடுத்து,இரு நிறுவனங்கள் வாங்கும் விருப்பத்தை தெரிவித்தன.
நந்தால் பைனான்ஸ் மற்றும் ஜே.பி.எம்., இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் விருப்பத்தை தெரிவித்தன.இதில், ஜே.பி.எம்., நிறுவனம் 190 கோடி ரூபாய்க்கு வாங்க விருப்பம் தெரிவித்து இருந்தது. நந்தா பைனான்ஸ் 210 கோடி ரூபாய் என குறிப்பிட்டிருந்தது.இதையடுத்து, நந்தா பைனான்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய, அரசு அனுமதி வழங்கி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|