பதிவு செய்த நாள்
30 நவ2021
20:13
புதுடில்லி:உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனத்தின் பிராட்பேண்டு சேவைகளை வழங்கும் துணை நிறுவனமான, ‘ஸ்டார்லிங்’, இந்தியாவில் தன்னுடைய முன்பதிவை நிறுத்தி உள்ளது.
இந்தியாவில், செயற்கைக் கோள் அடிப்படையிலான ‘பிராட்பேண்டு’ இணைய சேவைகளை வழங்க, ‘ஸ்டார்லிங்க்’ நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்கான உரிமம் எதுவும் பெறப்படாத போதும், முன்பதிவை துவக்கியது. கிட்டத்தட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், ஸ்டார்லிங்க் சேவையை பெற முன்பதிவு செய்தனர்.
இந்நிலையில், ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு இந்தியாவில் பிராட்பேண்டு சேவைகளை வழங்குவதற்கான உரிமம் வழங்கப்படவில்லை என்றும்; பொதுமக்கள் முன்பதிவு செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அண்மையில் தொலைதொடர்பு துறை அறிவித்தது. இதனையடுத்து, ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் இணையதளத்தில் முன்பதிவு நிறுத்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ‘உங்கள் பகுதியில் ஸ்டார்லிங் சேவை வழங்கப்படவில்லை. ஆனால் நாங்கள் அதிக செயற்கைக்கோள்களை ஏவுவதால், எங்கள் கவரேஜ் பகுதியைத் விரிவுபடுத்தி வருகிறோம். உங்கள் பகுதியில் எதிர்காலத்தில் கிடைக்குமா என்பதை, பின்னர் அறிந்து கொள்ளவும்’ என்றும் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|