பதிவு செய்த நாள்
01 டிச2021
21:40
புதுடில்லி:இந்தியாவின் தயாரிப்பு துறை உற்பத்தி, கடந்த நவம்பர் மாதத்தில், பிப்ர வரிக்கு பின், நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. உற்பத்தி அதிகரிப்பு, சந்தை நிலைமையில் அபிவிருத்தி, தேவைகள் அதிகரிப்பு, விற்பனை அதிகரிப்பு ஆகியவை இந்த வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்துள்ளன.
‘ஐ.எச்.எஸ்., மார்கிட் இந்தியா’ எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின், நவம்பர் மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தாண்டு, நவம்பர் மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான, ‘பி.எம்.ஐ.,’ குறியீடு, 57.6 புள்ளிகளாக உயர்ந்து உள்ளது. இது, அக்டோபரில் 55.9 புள்ளிகளாக இருந்தது.
இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும்.நவம்பர் மாதத்தில், இக்குறியீடு, 57.6 புள்ளிகளுக்கு உயர்ந்ததன் வாயிலாக, வலுவான முன்னேற்றத்தை உணர்த்தியுள்ளது.
வரும் காலத்திலும் துறையின் வளர்ச்சி முன்னேற்றப் பாதையில் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இருப்பினும் கொரோனா தொற்றின் புதிய அலை ஏற்படாமல் இருக்க வேண்டும். இப்போதைக்கு நிறுவனங்கள், கூடுதல் செலவை அவையே தாங்கி கொள்கின்றன. பொருட்களின் விலையையும் அதிகம் உயர்த்தாமல் சமாளித்து வருகின்றன.
ஆனால், மூலப் பொருட்கள் தட்டுப்பாடு தொடரும்பட்சத்திலும், வினியோகப் பிரச்னைகள் நீடிக்கும்பட்சத்திலும் பொருட்களின் விலை உயரும்.இதனால் தேவைகளில் அவை பாதிப்பை ஏற்படுத்த கூடும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|