எலான்மஸ்க் ‘ஸ்டார்லிங்க்’  நிறுவனம் இந்தியாவில் முன்பதிவை நிறுத்தியது எலான்மஸ்க் ‘ஸ்டார்லிங்க்’ நிறுவனம் இந்தியாவில் முன்பதிவை நிறுத்தியது ...   ஜி.எஸ்.டி., வசூலில் புதிய சாதனை ஜி.எஸ்.டி., வசூலில் புதிய சாதனை ...
தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி நவம்பரில் 10 மாத உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2021
21:40

புதுடில்லி:இந்தியாவின் தயாரிப்பு துறை உற்பத்தி, கடந்த நவம்பர் மாதத்தில், பிப்ர வரிக்கு பின், நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. உற்பத்தி அதிகரிப்பு, சந்தை நிலைமையில் அபிவிருத்தி, தேவைகள் அதிகரிப்பு, விற்பனை அதிகரிப்பு ஆகியவை இந்த வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்துள்ளன.
‘ஐ.எச்.எஸ்., மார்கிட் இந்தியா’ எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின், நவம்பர் மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தாண்டு, நவம்பர் மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான, ‘பி.எம்.ஐ.,’ குறியீடு, 57.6 புள்ளிகளாக உயர்ந்து உள்ளது. இது, அக்டோபரில் 55.9 புள்ளிகளாக இருந்தது.
இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும்.நவம்பர் மாதத்தில், இக்குறியீடு, 57.6 புள்ளிகளுக்கு உயர்ந்ததன் வாயிலாக, வலுவான முன்னேற்றத்தை உணர்த்தியுள்ளது.
வரும் காலத்திலும் துறையின் வளர்ச்சி முன்னேற்றப் பாதையில் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இருப்பினும் கொரோனா தொற்றின் புதிய அலை ஏற்படாமல் இருக்க வேண்டும். இப்போதைக்கு நிறுவனங்கள், கூடுதல் செலவை அவையே தாங்கி கொள்கின்றன. பொருட்களின் விலையையும் அதிகம் உயர்த்தாமல் சமாளித்து வருகின்றன.
ஆனால், மூலப் பொருட்கள் தட்டுப்பாடு தொடரும்பட்சத்திலும், வினியோகப் பிரச்னைகள் நீடிக்கும்பட்சத்திலும் பொருட்களின் விலை உயரும்.இதனால் தேவைகளில் அவை பாதிப்பை ஏற்படுத்த கூடும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)