பதிவு செய்த நாள்
01 டிச2021
21:51
புதுடில்லி:ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி வசூல், கடந்த நவம்பர் மாதத்தில் 1.31 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடந்த 2017 ஜூலையில், ஜி.எஸ்.டி., அறிமுகம் ஆனதில் இருந்து இதுவரை, அதிகளவில் வசூல் ஆன மாதங்களில், இது இரண்டாவது மாதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன், கடந்த ஏப்ரலில், மிக அதிக அளவாக 1.41 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆனது.
கடந்த நவம்பரில், மொத்தம் 1 லட்சத்து, 31 ஆயிரத்து, 526 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. இதில், மத்திய ஜி.எஸ்.டி., 23 ஆயிரத்து, 928 கோடி ரூபாயாகவும்; மாநில ஜி.எஸ்.டி., 31 ஆயிரத்து,127 கோடி ரூபாயாகவும்; ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., 66 ஆயிரத்து 815 கோடி ரூபாயாகவும்; கூடுதல் வரி 9,606 கோடி ரூபாயாகவும் உள்ளது.நடப்பு ஆண்டு நவம்பர் வசூல், கடந்த ஆண்டு நவம்பருடன் ஒப்பிடும்போது, 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும், 2019 நவம்பருடன் ஒப்பிட்டால் 27 சதவீதம் அதிகரித்து உள்ளது.இது, நாட்டின் பொருளாதார மீட்சியை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் காரணமாக, ஜி.எஸ்.டி., வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|