பதிவு செய்த நாள்
02 டிச2021
10:42
புதுடில்லி : ‘ரேட்கெய்ன் டிராவல் டெக்னாலஜிஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் 7ம் தேதி வருவதை அடுத்து, அதன் ஒரு பங்கின் விலை 405 – 425 ரூபாயாக நிர்ணயித்து அறிவித்துள்ளது.
விருந்தோம்பல் மற்றும் பயணங்கள் துறையில், தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வரும் இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக 1,335 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. இதையடுத்து பங்கின் விலையை நேற்று அறிவித்தது.பங்கு வெளியீடு 7ம் தேதி துவங்கி, 9ம் தேதியன்று நிறைவு பெறுகிறது.
பங்கு வெளியீட்டின் போது, 375 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 2.26 கோடி பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளன.இதில், நிறுவனத்தின் தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு, 5 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு, 40 ரூபாய் தள்ளுபடி விலையில் பங்குகள் ஒதுக்கப்படும்.
திரட்டப்படும் தொகையை கொண்டு, கடன்களை அடைக்கவும், தொழில்நுட்ப புதுமைகளை மேற்கொள்ளவும், தொழில்நுட்ப மேம்பாடுகளுக்காகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.முதலீட்டாளர்கள், குறைந்தபட்சம் 35 பங்குகள் அல்லது அதன் மடங்குகளில் வாங்க விண்ணப்பிக்கலாம்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|