பதிவு செய்த நாள்
02 டிச2021
20:49
புதுடில்லி:நாட்டின் வணிக ஏற்றுமதி, கடந்த நவம்பரில் 26.49 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், அதேசமயம், வர்த்தக பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதாகவும், மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பரில் ஏற்றுமதி 26.49 சதவீதம் அதிகரித்து, 2.24 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் 1.77 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி நடைபெற்றிருந்தது.இறக்குமதியை பொறுத்தவரை, 57.18 சதவீதம் அதிகரித்து, 3.99 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, வர்த்தக பற்றாக்குறை, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து 1.74 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதுவே, கடந்த ஆண்டு நவம்பரில், வர்த்தக பற்றாக்குறை 76 ஆயிரத்து, 425 கோடி ரூபாயாக இருந்தது.இதற்கு முன் அதிகபட்சமாக, கடந்த 2012ம் ஆண்டு அக்டோபரில், 1.52 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.நவம்பரில் தங்கம் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டது,
வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்தது.மேலும் பெட்ரோலியம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்ததும் ஒரு காரணமாக அமைந்தது என வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|