பதிவு செய்த நாள்
02 டிச2021
20:53
புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி, அடுத்த மாதத்திலிருந்து வாகனங்களின் விலையை அதிகரிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளது.
வாகன தயாரிப்புக்கு தேவைப்படும் உள்ளீட்டு பொருட்களுக்கான விலை அதிகரித்துள்ளதை அடுத்து, அதை சமன் செய்வதற்காக, விலையை உயர்த்த இந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.வாகனங்களின் விலை மாடலை பொறுத்து வேறுபடும் என தெரிவித்துள்ள மாருதி சுசூகி, அதுகுறித்த மேலதிக விபரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை.
உள்ளீட்டு விலை அதிகரித்து வருவது, வாகன துறையை மிகவும் பாதித்து வருகிறது. இதனால், மாருதி நிறுவனம் இந்த ஆண்டிலேயே மூன்று முறை விலையை அதிகரித்து அறிவித்தது.கடந்த ஜனவரி மாதத்தில் 1.4 சதவீதமும், ஏப்ரலில் 1.6 சதவீதமும் விலையை உயர்த்தி அறிவித்தது.
கடைசியாக, கடந்த செப்டம்பரில் 1.9 சதவீத விலை உயர்வை அறிவித்தது.ஆக மொத்தம், இதுவரை, நடப்பாண்டில் 4.9 சதவீதம் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|