உலகளவிலான கூட்டுறவு நிறுவனங்கள் இந்தியாவின்  ‘இப்கோ’வுக்கு முதலிடம் உலகளவிலான கூட்டுறவு நிறுவனங்கள் இந்தியாவின் ‘இப்கோ’வுக்கு முதலிடம் ...   ‘வோடபோன் ஐடியா’ மீது  ‘ரிலையன்ஸ் ஜியோ’ புகார் ‘வோடபோன் ஐடியா’ மீது ‘ரிலையன்ஸ் ஜியோ’ புகார் ...
அரசின் தங்க பத்திரங்களில் முதலீடு ரிசர்வ் வங்கியின் புதிய வசதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2021
02:30

மும்பை:மத்திய அரசு வெளியிடும் தங்க பத்திரங்களில், இனி முதலீட்டாளர்கள் அண்மையில் ரிசர்வ் வங்கியால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ‘ஆர்.பி.ஐ., ரீட்டெய்ல் டைரக்ட் போர்ட்டெல்’ எனும் முதலீட்டு தளத்தின் வாயிலாகவும் முதலீடு செய்ய லாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அறிமுகம்
தற்போது மத்திய அரசின் எட்டாம் கட்ட தங்க பத்திர வெளியீடு நடைபெற்று வருகிறது. இது, இன்றுடன் முடிவடைகிறது.இந்நிலையில், இத்தகைய தங்க பத்திரங்களை வாங்க விரும்புவோர், ரிசர்வ் வங்கியின் https://rbiretaildirect.org.in எனும் தளத்தின் வாயிலாக, முதலீட்டை மேற்கொள்ளலாம் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த தங்க பத்திரங்கள் தற்போது வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்ப ரேஷன், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றின் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.இனி ரிசர்வ் வங்கி தளத்தின் வாயிலாகவும் வாங்க முடியும்.அரசு பத்திரங்களில் சில்லரை முதலீட்டாளர்களும் முதலீடுகளை மேற்கொள்ளும் வகையில், ரிசர்வ் வங்கியின் இந்த புதிய முதலீட்டு தளத்தை, கடந்த மாதம் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த திட்டத்தின்படி, சில்லரை முதலீட்டாளர்கள், இந்த முதலீட்டு தளத்தில் வர்த்தக கணக்கை துவங்கி, அரசு பத்திரங்களில் எளிதாக முதலீடுகளை மேற்கொள்ள இயலும்.
20 கிலோ வரை
மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015, நவம்பரில்,தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது. இதில், தங்கத்தை, ஆவண வடிவில் சேமிக்கலாம். 1 கிராம் தங்கம், 1 யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும்.
பத்திர வெளியீட்டுக்கு முந்தைய மூன்று வர்த்தக தினங்களில் இருந்த, 999 சுத்தமான தங்கத்தின் விலையின் சராசரியைக் கொண்டு, வெளியீட்டு விலை நிர்ணயிக்கப் படுகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ஒரு கிராம் என்ற அளவில் முதலீடு செய்ய முடியும். அதிக பட்சமாக தனிநபர்கள் 4 கிலோ வரையும், அறக்கட்டளை போன்றவை 20 கிலோ வரையும் முதலீடு செய்யலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)