பதிவு செய்த நாள்
03 டிச2021
02:30
மும்பை:மத்திய அரசு வெளியிடும் தங்க பத்திரங்களில், இனி முதலீட்டாளர்கள் அண்மையில் ரிசர்வ் வங்கியால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ‘ஆர்.பி.ஐ., ரீட்டெய்ல் டைரக்ட் போர்ட்டெல்’ எனும் முதலீட்டு தளத்தின் வாயிலாகவும் முதலீடு செய்ய லாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அறிமுகம்
தற்போது மத்திய அரசின் எட்டாம் கட்ட தங்க பத்திர வெளியீடு நடைபெற்று வருகிறது. இது, இன்றுடன் முடிவடைகிறது.இந்நிலையில், இத்தகைய தங்க பத்திரங்களை வாங்க விரும்புவோர், ரிசர்வ் வங்கியின் https://rbiretaildirect.org.in எனும் தளத்தின் வாயிலாக, முதலீட்டை மேற்கொள்ளலாம் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த தங்க பத்திரங்கள் தற்போது வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்ப ரேஷன், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றின் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.இனி ரிசர்வ் வங்கி தளத்தின் வாயிலாகவும் வாங்க முடியும்.அரசு பத்திரங்களில் சில்லரை முதலீட்டாளர்களும் முதலீடுகளை மேற்கொள்ளும் வகையில், ரிசர்வ் வங்கியின் இந்த புதிய முதலீட்டு தளத்தை, கடந்த மாதம் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த திட்டத்தின்படி, சில்லரை முதலீட்டாளர்கள், இந்த முதலீட்டு தளத்தில் வர்த்தக கணக்கை துவங்கி, அரசு பத்திரங்களில் எளிதாக முதலீடுகளை மேற்கொள்ள இயலும்.
20 கிலோ வரை
மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015, நவம்பரில்,தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது. இதில், தங்கத்தை, ஆவண வடிவில் சேமிக்கலாம். 1 கிராம் தங்கம், 1 யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும்.
பத்திர வெளியீட்டுக்கு முந்தைய மூன்று வர்த்தக தினங்களில் இருந்த, 999 சுத்தமான தங்கத்தின் விலையின் சராசரியைக் கொண்டு, வெளியீட்டு விலை நிர்ணயிக்கப் படுகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ஒரு கிராம் என்ற அளவில் முதலீடு செய்ய முடியும். அதிக பட்சமாக தனிநபர்கள் 4 கிலோ வரையும், அறக்கட்டளை போன்றவை 20 கிலோ வரையும் முதலீடு செய்யலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|