பதிவு செய்த நாள்
03 டிச2021
21:03
மும்பை:‘ஒமைக்ரான்’ வைரசால் பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்காது என, மத்திய சுகாதாரத் துறை அறிவித்திருந்த போதிலும், அச்சத்தின் காரணமாக, பங்குச் சந்தைகள் சரிவை கண்டன.
இந்தியாவுக்குள்ளும் ஒமைக்ரான் நுழைந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்ததை அடுத்து, பங்குச் சந்தை வர்த்தகர்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.சந்தையின் போக்கில் நிலையற்ற சூழல் ஏற்படக்கூடும் என, அவர்கள் அஞ்சியதை அடுத்து, அது வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது.
நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை ஆகிய இரண்டும் சரிவைச் சந்தித்தன.ஆனால், உலக பங்குச் சந்தைகள் பல, நேற்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் நிறைவு செய்தன. குறிப்பாக, ஆசிய பங்குச் சந்தைகளான ஷாங்காய், டோக்கியோ, சியோல், ஹாங்காங் ஆகியவை ஏற்றத்துடன் நிறைவு பெற்றன.இருப்பினும், இந்திய முதலீட்டாளர்களின் அச்சம் காரணமாக, இந்திய சந்தைகள் இரண்டும், இறக்கத்தை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|