பதிவு செய்த நாள்
05 டிச2021
18:48
பொது ஆயுள் காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி., பங்குகளை வெளியிடும் போது பாலிசிதாரர்கள், பங்குகளை வாங்க தகுதி பெறும் வகையில் பான் கார்டு உள்ளிட்ட தகவல்களை அப்டேட் செய்யுமாறு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் பங்கு விலக்கல் திட்டப்படி, எல்.ஐ.சி., பொது பங்குகளை வெளியிட இருக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்த வெளியீடு நிகழலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த பங்கு வெளியீட்டில் 10 சதவீத பங்குகள் எல்.ஐ.சி., பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளது. இந்த பிரிவின் கீழ் பங்குகளை வாங்க விண்ணப்பிக்கும் வகையில் பாலிசிதாரர்கள் தங்களது பான் கார்டு, டிமெட் கணக்கு உள்ளிட்ட தகவல்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்.ஐ.சி., நிறுவன இணையதளத்தை அணுகுவதன் வாயிலாக பாலிசிதாரர்கள் இந்த தகவல்களை அப்டேட் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் உள்ள ஆன்லைன் பான் பதிவு எனும் பகுதியில் இதற்கான வசதியை காணலாம்.பான் இணைப்பு தொடர்பான தகவலையும் இணையதளம் வாயிலாகவே சரி பார்த்துக்கொள்ளலாம் என்றும் நிறுவனம் இது தொடர்பாக தெரிவித்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|