டெர்ம் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை உயர்கிறது?டெர்ம் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை உயர்கிறது? ...  ஆயிரம் சந்தேகங்கள் :‘ஒமைக்ரான்’ பரவும் நிலையில்பங்குச் சந்தை பக்கம் போகலாமா? ஆயிரம் சந்தேகங்கள் :‘ஒமைக்ரான்’ பரவும் நிலையில்பங்குச் சந்தை பக்கம் ... ...
அவசரகால நிதியை எப்போது பயன்படுத்த வேண்டும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2021
18:52

எதிர்பாராத நெருக்கடியின் போது அத்தியாவசிய தேவைகளை சமாளிக்க உதவும் அவசரகால நிதியின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்துள்ளனர். குறிப்பாக கொரோனா பாதிப்பால் உண்டான பொருளாதார பாதிப்பு இந்த நிதியின் தேவையை தெளிவாக உணர்த்தியது.

அவரசகால நிதியை உருவாக்கும் வழிகள், எவ்வளவு தொகையை சேமிக்க வேண்டும், இந்த நிதியை எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் போன்ற விஷயங்களும் வல்லுனர்களால் வலியுறுத்தப்படுகின்றன. அதே போலவே அவசரகால நிதியை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்திருப்பது அவசியம்.

வேலையிழப்பு:

எதிர்பாராத தருணங்களில் செலவுகளை சமாளிப்பதற்கு என சேமிக்கப்படும் அவசரகால நிதியை சரியான தருணங்களில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வேலையிழப்பு ஏற்பட்டு மாத வருமானம் நின்று போக்கும் நிலையில் அவசரகால நிதியை நாடலாம். ஊதியம் குறைப்பு போன்ற நிலையிலும் இந்த நிதியை பயன்படுத்தலாம்.

மருத்துவ செலவுகள்:

எதிர்பாராத மருத்துவ செலவுகள் நிச்சயம் பொருளதார நோக்கில் சுமையாக அமையலாம். அதிலும் போதிய மருத்துவ காப்பீடு இல்லாத நேரங்களில் இன்னும் சுமையாக மாறலாம். இது போன்ற தருணங்களில் கைகொடுப்பதற்காகவே அவசரகால நிதி சேமிக்கப்படுகிறது.

வாகன செலவு:

பணி நிமித்தமாக வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு எதிர்பாராத காரணங்களால் வாகன பழுது ஏற்பட்டு அதிக தொகை தேவைப்பட்டால் அவசரகால நிதியை எடுத்துக்கொள்ளலாம். இதே போல, பழுது காரணமாக வீட்டில் உள்ள முக்கிய உபகரணங்களை மாற்றும் தேவை இருந்தாலும் இந்த நிதியை நாடலாம்.

உண்மையான தேவை:

எதிர்பாராத நெருக்கடி பலவிதங்களில் ஏற்படலாம் என்றாலும், அவை எல்லாவற்றுக்கும் அவசரகால நிதியில் கைவைக்க கூடாது. அந்த நெருக்கடி அத்தியாவசிய தேவை சார்ந்ததாக இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். தவிர்க்க கூடிய செலவுகள், வாழ்வியல் தேவைக்கான செலவுகளுக்கு இந்த நிதிய பயன்படுத்தக்கூடாது.

ஆய்வு அவசியம்:

நிதி நெருக்கடி ஏற்பட்டிருந்தால் அதற்கான காரணங்களை ஆய்வு செய்து, தவிர்க்க கூடிய செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். இதன் வாயிலாக உண்மையான தேவையை எளிதாக அறியலாம். சரியான தருணங்களில் நிதியை பயன்படுத்தும் அதே நேரத்தில் மீண்டும் அந்த நிதியை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)