பதிவு செய்த நாள்
07 டிச2021
10:44
புதுடில்லி : வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல விலை உயர்வை அறிவித்து வரும் நிலையில் டாடா மோட்டார்ஸ், ஹோண்டா, ரெனோ ஆகிய நிறுவனங்களும் விலையை அதிகரிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன.
ஏற்கனவே நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ மற்றும் ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ‘மெர்சிடிஸ் பென்ஸ்’ ஆடி ஆகிய கார் நிறுவனங்கள் ஜனவரியிலிருந்து விலையை அதிகரிக்க இருப்பதாக அறிவித்துள்ளன.உள்ளீட்டு பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக கார் தயாரிப்பு நிறுவனங்கள் அதன் பாதிப்பை ஈடுகட்டும் விதமாக விலை உயர்வை அறிவித்து வருகின்றன.
ஆடி கார் 3 சதவீதம் அளவுக்கும், மெர்சிடிஸ் பென்ஸ் குறிப்பிட்ட சில மாடல் கார்களுக்கு 2 சதவீதம் அளவுக்கும் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. மாருதி இன்னும் விலை உயர்வு எவ்வளவு என்பது குறித்து அறிவிக்கவில்லை. ஆனால் விலையை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அதன் கார்களின் விலையை ஜனவரியிலிருந்து 2.5 சதவீதம் வரை அதிகரிக்க இருப்பதாக, ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு அறிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|