பதிவு செய்த நாள்
07 டிச2021
10:52
புதுடில்லி : நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் போக்கு மேலும் தொடர்கிறது.
‘மேப்மைஇந்தியா’ நிறுவனம், டிசம்பர் 9ம் தேதியன்று பங்குகளை வெளியிடுகிறது. 1,040 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ள நிலையில், இந்நிறுவனம், ஒரு பங்கின் விலை 1,000 – 1033 ரூபாயாக நிர்ணயித்து, நேற்று அறிவித்துள்ளது.
இதேபோல் ‘ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ்’ நிறுவனமும், அதன் ஒரு பங்கின் விலை 113_118 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.இந்நிறுவனம் பங்கு வெளியீட்டின் வாயிலாக 600 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது.இதன் பங்கு வெளியீடு நாளை துவங்குகிறது.
இந்நிலையில், அனில் அகர்வால் தலைமையிலான ‘ஸ்டெர்லைட் பவர் டிரான்ஸ்மிஷன்’ மற்றும் தரவு மைய நிறுவனம் ‘இ.எஸ்.டி.எஸ்., சாப்ட்வேர் சொலுஷன்’ ஆகிய நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.இதற்கிடையே, நகை விற்பனை நிறுவனமான ‘சென்கோ’ மற்றும் ஆடம்பர வாட்சுகள் விற்பனை நிறுவனமான ‘எதோஸ்’ ஆகியவை, அடுத்த மாதம் பங்கு வெளியீட்டுக்கு வர திட்டமிட்டுள்ளன.இந்நிறுவனங்கள் இரண்டுமே தலா 500 கோடி ரூபாய் அளவிலான நிதியை, புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டமிட்டுள்ளன.
அத்துடன் ‘ஐநாக்ஸ் விண்டு’ நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘ஐநாக்ஸ் கிரீன் எனர்ஜி சர்வீசஸ்’ நிறுவனமும் 500 கோடி ரூபாய் நிதி திரட்ட, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|