பதிவு செய்த நாள்
07 டிச2021
20:48
புதுடில்லி:காலணி தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ‘மெட்ரோ பிராண்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீடு, வரும், 10ம் தேதி துவங்கி, 14ம் தேதி முடிவடைகிறது.ஒரு பங்கின் குறைந்தபட்ச விலை 485 ரூபாயாகவும், அதிகபட்ச விலை 500 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சில்லரை முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 30 பங்குகள் மற்றும் அதன் மடங்குகளில் முதலீடு செய்யலாம்.இந்த பங்கு வெளியீட்டின் வாயிலாக, அதிகபட்சமாக, 1,367 கோடி ரூபாய் திரட்ட நிறுவனம் திட்டமிட்டுஉள்ளது.
நாடு முழுதும் ‘மெட்ரோ, வாக்கவே, கிராக்ஸ்’ பிராண்டு கடைகளை திறக்கவும், நிர்வாகச் செலவினங்களுக்கும், பங்கு வெளியீட்டில் திரட்டப்படும் தொகை பயன்படுத்திக் கொள்ளப் படும். தற்போது, இந்நிறுவனத்திற்கு, 136 நகரங்களில், 598 கடைகள் உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில், 211 கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
மும்பையில், 1955ம் ஆண்டு துவங்கப்பட்ட மெட்ரோ நிறுவனம், ‘டா வின்சி, ஜே பான்டினி’ பிராண்டுகளுடன் ‘ஸ்கெச்சர்ஸ், கிளார்க்ஸ், பிட்பிளாப், புளோர்ஷெய்ம்’ உள்ளிட்ட மூன்றாம் நபர் பிராண்டுகளில் காலணிகள், பெல்ட், சாக்ஸ், வாலட் போன்றவற்றையும் விற்பனை செய்கிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|