பதிவு செய்த நாள்
08 டிச2021
13:55
மும்பை : கொரோனாவின் தாக்கம் குறைந்த சமயத்தில் இப்போது ஓமைக்காரன் எனும் புதிய வகை வைரஸாக உருமாறி பரவி வருவதன் எதிரொலியாக, ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் ஏற்கனவே உள்ள வட்டி விகிதத்திலேயே தொடர முடிவு செய்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் மாதாந்திர நிதி நிலைக்கூட்டம் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வட்டி விகிதம் மாற்றமின்றி தொடர்வதாக சக்திகாந்த தாஸ் அறிவித்தார். இதன்மூலம் தொடர்ச்சியாக 9வது முறையாக வட்டி விகிதங்கள் மாற்றமின்றி தொடருகின்றன. அதன்படி ரெபோ வட்டி விகிதம் 4 சதவீதத்திலும், ரிவர்ஸ் ரெபோ வட்டி விகிதம் 3.35 சதவீதத்திலும், ரொக்க கையிருப்பு விகிதம்(சிஆர்ஆர்) 4 சதவீதத்திலும், எஸ்எல்ஆர் விகிதம் 18 சதவீதத்திலும் தொடருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நடப்பாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதத்தில் நீடிக்கும் என்றும், நான்காம் காலாண்டில் மொத்த விலை பணவீக்கம் உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 5.3 சதவீதமாக தக்கவைக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வால் கடந்த செப்டம்பர் மாதத்தை விட அக்டோபரில் சில்லறை வர்த்தக பணவீக்கம் 4.35 சதவீதத்தில் இருந்து 4.48 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|