9வது முறையாக வட்டி வகிதம் மாற்றமின்றி நீடிப்பு9வது முறையாக வட்டி வகிதம் மாற்றமின்றி நீடிப்பு ...  மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீதமாக குறைப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீதமாக குறைப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2021
20:37

மும்பை:வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ‘ரெப்போ’ வட்டி விகிதம் உயர்த்தப்படும் என எதிர்பார்த்த நிலையில், அதில் மாற்றமில்லை என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, இரு மாதங்களுக்கு ஒரு முறை கூடி, நிதிச் சந்தை நிலவரம் தொடர்பான கொள்கை முடிவுகளை எடுக்கிறது.இதன்படி கடந்த, 6ம் தேதி இக்குழுவின் கூட்டம் துவங்கியது.
இரு நாட்கள் நடந்த இக் கூட்டத்தில் எடுத்துள்ள கொள்கை முடிவுகள் குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம், மாற்றமின்றி, 4 சதவீதமாக தொடர, குழு உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். அதுபோல, ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் செய்யும் டிபாசிட்டிற்கான ‘ரிவர்ஸ் ரெப்போ’ வட்டி விகிதமும் மாற்றமின்றி, 3.35 சதவீதமாக தொடருகிறது.
நாட்டின் வளர்ச்சி மற்றும் பணவீக்க இலக்கை பராமரிக்கும் நோக்கில் வட்டி விகிதங்களில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. நடப்பு, 2021 – 22ம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.5 சதவீதமாக வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல, பணவீக்கம், 5.3 சதவீதம் என்ற அளவில், ரிசர்வ் வங்கி நிர்ணயித்த இலக்கிற்குள் இருக்கும்.
எரிபொருள் மற்றும் சமையல் எண்ணெய் விலை உயர்வால், செப்.,ல் 4.35 சதவீதமாக இருந்த சில்லரை விலை பணவீக்கம், 4.48 சதவீதமாக அதிகரித்துள்ளது. வரும், 2026 மார்ச் வரை சில்லரை பணவீக்க இலக்கு, 2 சதவீதத்திற்கு குறையாமலும், 6 சதவீதத்திற்கு மிகாமலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
பணவீக்க உயர்வால் ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில்புதிய ‘ஒமைக்ரான்’ கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வட்டி விகிதத்தை மாற்றமின்றி தொடர ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கி தொடர்ந்து, 9வது முறையாக ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யாமல் இருப்பது நிதிச் சந்தை வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)