பதிவு செய்த நாள்
08 டிச2021
22:01
புதுடில்லி:இந்தியா, கடந்த இரு மாதங்களில் 9 லட்சத்து 39 ஆயிரம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்துள்ளதாக, இந்திய சர்க்கரை வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:நடப்பு, 2021 – 22ம் சர்க்கரை சந்தைப்படுத்துதல் பருவம், அக்., 1ல் துவங்கியது.டிசம்பர் முதல்வாரம் வரை, 9 லட்சத்து 39ஆயிரத்து 435 டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
அரசு மானியமின்றி, 33 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு ‘ஆர்டர்’ கிடைத்துள்ளது. மஹாராஷ்டிரா சர்க்கரை ஆலைகள் அதிக அளவில் ஏற்றுமதி வாய்ப்பு பெற்றுள்ளன. ஆனால், சாலை மற்றும் ரயில் வாயிலான சரக்கு போக்குவரத்தில் பலவித பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
கடந்த, 2020 – 21ம் சந்தைப்படுத்துதல் பருவத்தில், இந்தியா, சாதனை அளவாக, 72 லட்சத்து 30 ஆயிரம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளது. இதில் பெரும்பகுதி அரசு மானியத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டதாகும். நடப்பு சந்தைப் பருவத்தில் மானியமின்றி சர்க்கரை ஏற்றுமதி செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|