தமிழகத்தில் மின் வாகன தொழிற்சாலை ‘சிம்பிள் எனர்ஜி’ ரூ.2,500 கோடி முதலீடு தமிழகத்தில் மின் வாகன தொழிற்சாலை ‘சிம்பிள் எனர்ஜி’ ரூ.2,500 கோடி முதலீடு ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
கொரோனா பாதிப்புகளையும் மீறி பெருநிறுவனங்களின் மதிப்பு உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2021
01:07

மும்பை:நடப்பு ஆண்டில், தொற்று நோய் பாதிப்புகள் இருந்த போதிலும், ‘டாப்’ நிறுவனங்களின் நிகர மதிப்பு, 68 சதவீதம் அதிகரித்துள்ளதாக, ‘பர்கண்டி’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது.
அதேசமயம் தொற்று நோய் பரவல், சிறு வணிகங்கள் மற்றும் இயல்பு வாழ்க்கை ஆகியவற்றில் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம், ‘பர்கண்டி பிரைவேட் ஹுருன் இந்தியா 500’ எனும் டாப் நிறுவனங்களின் பட்டியலை தொகுத்துள்ளது.இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களின் மொத்த நிகர மதிப்பு 228 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இந்த 500 நிறுவனங்களில், 200 நிறுவனங்களின் நிகர மதிப்பு, இவ்வாண்டில் இருமடங்காக அதிகரித்துள்ளது.
பட்டியலில் முதலிடத்தில், முகேஷ் அம்பானி தலைமையிலான ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், 16.7 லட்சம் கோடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளது.இரண்டாவது இடத்தில், 13.1 லட்சம் கோடி ரூபாயுடன் ‘டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்’ நிறுவனமும், மூன்றாவது இடத்தில் 9.1 லட்சம் கோடி ரூபாயுடன் ‘எச்.டி.எப்.சி., வங்கி’யும் இடம்பெற்றுள்ளன.
சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்களில், ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’ 1.8 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன், முதலிடத்தில் உள்ளது.இந்த ஆண்டில், இதன் மதிப்பு 127 சதவீதம் அதிகரித்துள்ளது.இந்த 500 நிறுவனங்கள், மொத்தம் 43 நகரங்களில் உள்ளவையாகும்.
இவற்றில், மும்பையில் 167 நிறுவனங்களும்; பெங்களூரில் 52 நிறுவனங்களும்; சென்னையில் 38 நிறுவனங்களும் உள்ளன. மொத்த நிறுவனங்களில் 77 நிறுவனங்கள், நிதி சேவை துறையையும், 64 நிறுவனங்கள் சுகாதாரப் பிரிவையும் சேர்ந்தவையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக நிறுவனங்கள்
தமிழகத்தின் முதல் 10 நிறுவனங்களின் மொத்த மதிப்பு, 116 சதவீதம் அதிகரித்து, 5.9 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது, ‘ஹுருன் இந்தியா 500’ பட்டியலின் மொத்த மதிப்பில், 2.6 சதவீதத்துக்கு சமம்.
தமிழகத்தின் மிகப்பெரிய நிறுவனமாக, 2.18 லட்சம் கோடி மதிப்புடன், ‘டைட்டன்’ நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது.இதையடுத்து, இரண்டாவது இடத்தில், 67 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் மதிப்புடன் ‘ராம்சரண் அன்ட் கோவிந்த்’ நிறுவனமும், மூன்றாவது இடத்தில் 59 ஆயிரத்து, 498 கோடி ரூபாய் மதிப்புடன் ‘அப்போலோ மருத்துவமனை’ நிறுவனமும் உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)