கொரோனா பாதிப்புகளையும் மீறி பெருநிறுவனங்களின் மதிப்பு உயர்வு கொரோனா பாதிப்புகளையும் மீறி பெருநிறுவனங்களின் மதிப்பு உயர்வு ...  தமிழக நிறுவனங்களின் சொத்து மதிப்பு அதிகரிப்பு தமிழக நிறுவனங்களின் சொத்து மதிப்பு அதிகரிப்பு ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2021
01:10

பங்கு விலை அறிவிப்பு



ராணுவம் உள்ளிட்டவற்றுக்கு எலக்ட்ரானிக் சாதனங்களை வழங்கி வரும் 'டேட்டா பேட்டர்ன்ஸ்' நிறுவனம், இம்மாதம் 14ம் தேதியன்று, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது.இதையடுத்து, இந்நிறுவனம் அதன் ஒருபங்கின் விலை 555 - 585 ரூபாயாக நிர்ணயித்து அறிவித்துள்ளது. பங்கு வெளியீடு 14ம் தேதி துவங்கி, 16ம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய அமெரிக்காவில் டி.வி.எஸ்.,

மத்திய அமெரிக்காவில், தன் வணிகத்தை மேலும் விரிவுபடுத்தும் முயற்சியில், நிகரகுவா மற்றும் கோஸ்டா ரிகா சந்தைகளுக்காக, 'க்ரூபோ கியு' நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக, 'டி.வி.எஸ்., மோட்டார்' நிறுவனம் தெரிவித்துள்ளது.இச்சந்தைகளில் அந்நிறுவனம் விற்பனை, சேவை, உதிரிபாகங்கள், வாடிக்கையாளர் தொடர்பு ஆகியவற்றை மேற்கொள்ள இருப்பதாகவும்,டி.வி.எஸ்., மோட்டார் தெரிவித்துள்ளது.


எட்டு நிறுவனங்களுக்கு ஒப்புதல்

உள்நாட்டில் மருத்துவ சாதனங்களை உற்பத்தி செய்வதை ஊக்குவிப்பதற்காக, பி.எல்.ஐ., எனும், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், எட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த எட்டு ஆலைகளை அமைப்பதன்வாயிலாக, அவை 260.4 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளன. மேலும், கிட்டத்தட்ட 2,600 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.


பங்கு வெளியீட்டுக்கு விண்ணப்பம்'
ஜே.கே., பைல்ஸ் அண்டு இன்ஜினியரிங்' நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி'க்கு விண்ணப்பித்துள்ளது. இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 800 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் 100 சதவீத பங்குகள், ஆடைகள் நிறுவனமான'ரேமண்ட்' வசம் உள்ளது. முதல் மூன்று இடங்கள்மேற்கு வங்கத்தில், சந்தை மதிப்பின் அடிப்படையில், நடப்பு ஆண்டில் அதிக மதிப்பு கொண்ட நிறுவனங்களாக 'ஐ.டி.சி., ஸ்ரீ சிமென்ட்' ஆகிய நிறுவனங்கள் உள்ளதாக, 'பர்கண்டி' எனும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.மூன்றாவது இடத்தை, 'பிரிட்டானியா பிஸ்கட்' நிறுவனம் பிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பிரிட்டானியாவின் பதிவு அலுவலகம்கோல்கட்டாவில் உள்ளது.


'பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க்'

'பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க்' நிறுவனத்துக்கு, ரிசர்வ் வங்கி, 'ஷெட்யூல்டு பேங்க்' எனும்அந்தஸ்தை வழங்கி உள்ளது.இதன் வாயிலாக, இனி இவ்வங்கி, புதிய வணிக வாய்ப்புகளில் இறங்கலாம். மேலும் அரசு மற்றும் பெரிய கார்ப்பரேஷன்களின் திட்டங்களிலும்பங்கேற்க முடியும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)