பதிவு செய்த நாள்
10 டிச2021
21:45
புதுடில்லி:கொரோனா பாதிப்புகளை அடுத்து, செலவு விஷயங்களில் நடுத்தர வகுப்பினர் கையை சுருக்கியுள்ளனர்.
இதை அடுத்து, புதுப்பிக்கப்பட்ட பழைய பொருட்களுக்கான சந்தை அதிகரித்து வருவதாக, துறை சார்ந்தோர் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக ஸ்மார்ட்போன்கள், மரச் சாமான்கள், மின் சாதனங்கள் போன்றவற்றில், புதியவற்றை வாங்குவதை விட, புதுப்பிக்கப்பட்ட பழையனவற்றை வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர். கார்கள் பிரிவிலும் பழைய கார்களின் விற்பனை அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.
வீட்டிலிருந்தே வேலை பார்ப்பது மற்றும் ‘ஆன்லைன்’ வகுப்புகள் போன்றவை காரணமாக மின்னணு சாதனங்களுக்கான தேவை அதிகரித்து உள்ளது. சிறு நகரங்களிலும் இதற்கான தேவை அதிகரித்துள்ளது.இதையடுத்து, தரமான பிராண்டுகளின் புதுப்பிக்கப்பட்ட சாதனங்களை வாங்குவது அதிகரித்து வருகிறது.
ஸ்மார்ட் போன், ஹெட் போன், லேப்டாப் போன்றவற்றின் விற்பனை இப்பிரிவில் அதிகரித்து உள்ளது.கார்களை பொறுத்தவரை, முன்பதிவு செய்துவிட்டு நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை அடுத்து, பலர் புதுப்பிக்கப்பட்ட கார்கள் பக்கம் கவனத்தை திருப்பி வருகின்றனர். கம்ப்யூட்டர்களுக்கான மேஜை, நாற்காலி உள்ளிட்ட புதுப்பிக்கப்பட்ட மரச் சாமான்களுக்கான சந்தை, 2025ம் ஆண்டில் 74 ஆயிரம் கோடி ரூபாய் சந்தையாக உயரும் என கருதப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|