பதிவு செய்த நாள்
10 டிச2021
22:16
புதுடில்லி:கடந்த நவம்பர் மாதத்தில், நாட்டின் பயணியர் வாகன விற்பனை 19 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளதாக, ‘சியாம்’ எனும், இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், நிறுவனங்கள் ‘ஒமைக்ரான்’ அபாயம் குறித்து விழிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.
மேலும் தெரிவித்து உள்ளதாவது:கடந்த ஆண்டு நவம்பரில் பயணியர் வாகன விற்பனை 2.65 லட்சமாக இருந்தது. இந்த ஆண்டு நவம்பரில் 2.16 சதவீதமாக குறைந்துள்ளது. இது 19 சதவீத சரிவாகும்.இதேபோல், இருசக்கர வாகன விற்பனையும் 34 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை 7 சதவீதம் சரிந்துள்ளது.பண்டிகை காலத்தை முன்னிட்டு விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், ஏழு ஆண்டுகளில் இல்லாத வகையில், பயணியர் வாகன விற்பனை சரிவைக் கண்டுள்ளது.
இருசக்கர வாகன விற்பனையை பொறுத்தவரை, 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துவிட்டது. மூன்று சக்கர வாகன விற்பனை 19 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துவிட்டது.தற்போது புதிதாக ஒமைக்ரான் அபாயம் எழுந்துள்ள நிலையில், நிறுவனங்கள், ஊழியர்களது பாதுகாப்பை உறுதி செய்வதுடன், வினியோக இடையூறுகளையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|