பதிவு செய்த நாள்
11 டிச2021
19:13
புதுடில்லி:நாட்டின் தற்போதைய தலைமை பொருளாதார ஆலோசகரான கே.வி.சுப்ரமணியனின் பதவிக்காலம் வரும் 17ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இதையடுத்து புதிய நபரை நியமிப்பதற்கான முயற்சிகள் சூடுபிடித்துள்ளன.இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:தலைமை பொருளாதார ஆலோசகர் பதவிக்கு, 10 – 12 விண்ணப்பங்கள் வந்தன. இவற்றில் மூன்று பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.பூனம் குப்தா, சஞ்சீவ் சன்யால் மற்றும் பாமி துவா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இவர்களில், பூனம் குப்தா ‘நேஷனல் கவுன்சில் ஆப் அப்ளைடு எகனாமிக் ரிசர்ச்’ நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரலாக உள்ளார்.
சஞ்சீவ் சன்யால் நிதியமைச்சகத்தின் முதன்மை பொருளாதார ஆலோசகராகவும், பாமி துவா ‘டெல்லி ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்’ ல் பொருளாதாரத் துறையின் தலைவராகவும் உள்ளனர்.
தற்போதைய ஆலோசகர் சுப்ரமணியன், மூன்றாண்டு பதவிக்காலத்துக்கு பின் ஐதராபாதில், பேராசிரியர் பணிக்கு திரும்ப உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|