தலைமை பொருளாதார ஆலோசகர் பதவிக்கு 3 பெயர்கள் பரிந்துரை தலைமை பொருளாதார ஆலோசகர் பதவிக்கு 3 பெயர்கள் பரிந்துரை ...  டிராக்டர் விற்பனையில் திடீர் தடுமாற்றம் டிராக்டர் விற்பனையில் திடீர் தடுமாற்றம் ...
சிரிஞ்சு, ஊசிகளுக்கு தட்டுப்பாடு வரும்எச்.எம்.டி., ஆலைகள் மூடல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2021
19:25

புதுடில்லி:உலகின் மிகப்பெரிய சிரிஞ்சு மற்றும் ஊசிகள் தயாரிப்பு நிறுவனமான எச்.எம்.டி., எனும் 'ஹிந்துஸ்தான் சிரிஞ்சஸ் அண்டு மெடிக்கல் டிவைசஸ்', பரிதாபாத்தில் உள்ள தன்னுடைய மூன்று உற்பத்தி ஆலைகளை மூடியுள்ளது.

ஹரியானா மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவைத் தொடர்ந்து, இந்த ஆலைகளை மூடும் முடிவை இந்நிறுவனம் எடுத்துள்ளது.இதையடுத்து, சிரிஞ்சுகள் மற்றும் ஊசிகளுக்கு தட்டுப்பாடு வரக்கூடும் என அஞ்சப்படுகிறது. அதிலும், புதிய 'ஒமைக்ரான்' கொரோனா தொற்று காலத்தில், சிரிஞ்சுகளுக்கான தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில், நிலைமை மோசமாகக்கூடும் என கருதப்படுகிறது.

இந்தியாவின் சிரிஞ்சுகள் தேவையில் மூன்றில் இரண்டு பங்கை, இந்நிறுவனம் பூர்த்தி செய்து வருகிறது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை அடுத்து, இந்நிறுவனம் பரிதாபாத்தில் உள்ள நான்கு ஆலைகளில் மூன்றில் உற்பத்தியை நிறுத்தியுள்ளது.

இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜிவ் நாத் கூறியதாவது: தற்போதைய நிலவரப்படி, நிறுவனத்தின் கையிருப்பு இரண்டு நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிக்காது என்ற நிலைமையில் உள்ளது. நாள் ஒன்றுக்கு நான்கு ஆலைகள் வாயிலாக 1.2 கோடி சிரிஞ்சுகளை நிறுவனம் தயாரித்து வருகிறது. திங்கள் முதல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

ஏற்கனவே உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சிரிஞ்சுகளுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இப்போது 3 ஆலைகளில் உற்பத்தியை நிறுத்துவதால், நாள் ஒன்றுக்கு 80 லட்சம் சிரிஞ்சுகள், 1.5 கோடி ஊசிகள் என்ற அளவில் தட்டுப்பாடு அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், எச்.எம்.டி., ஆலைகள் டீசல் ஜெனரேட்டர் உதவியுடன் இயங்குவதாக கருதுகிறது. எச்.எம்.டி., தரப்பில் அவ்வாறு செய்வதில்லை என உறுதி அளித்தும், வாரியம் அதில் சமாதானமாகவில்லை.இதையடுத்து, சட்ட நடவடிக்கைகள் மற்றும் உற்பத்தி ஆலைகளுக்கு சீல் வைப்பது ஆகியவற்றை தவிர்க்கும் வகையில், நிறுவனம் தானாக முன்வந்து ஆலைகளை மூடிவிடுமாறு வாரியத்தால் அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, ஆலைகளை தானாக மூடிவிடும் முடிவுக்கு எச்.எம்.டி., நிறுவனம் வந்தது.இதற்கிடையே, நிறுவனத்தின் தரப்பிலிருந்து, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அதில், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், கொரோனா தடுப்பூசி மற்றும் பிற சுகாதார நோக்கங்களுக்காக, சிரிஞ்சுகளை மருத்துவ சாதனமாக அறிவிக்க வேண்டும்.

மேலும் உற்பத்தி ஆலைகள் தடையின்றி செயல்பட அனுமதிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)