பதிவு செய்த நாள்
11 டிச2021
19:31
புதுடில்லி:மருந்துகளை ஆன்லைனில் விற்பனை செய்து வரும் பார்ம்ஈஸி நிறுவனம், ஐ.பி.ஓ., எனும் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு அண்மையில் விண்ணப்பித்துள்ளது.
இந்நிலையில், அதன் விண்ணப்பதை நிராகரிக்க வேண்டும் என்று அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான சி.ஏ.ஐ.டி., செபியை வலியுறுத்தி உள்ளது.இது குறித்து சி.ஏ.ஐ.டி., எழுதியுள்ள கடிதத்தில், ‘டெல்லி உயர் நீதிமன்றம் 2018ல் பிறப்பித்த உத்தரவின்படி, மருந்துகள் ஆன்லைனில் விற்பனை செய்வதற்கு அனுமதி கிடையாது.
பார்ம்ஈஸி நிறுவனத்தின் வணிகம், நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. இது சம்பந்தமான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பங்கு வெளியீட்டுக்கு அனுமதி அளித்தால், அது லட்சக்கணக்கான முதலீட்டாளர்களின் முதலீட்டுக்கு ஆபத்து விளைவிப்பதாக அமைந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்ம்ஈஸி நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 6,250 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|