பதிவு செய்த நாள்
11 டிச2021
19:35
புதுடில்லி:இந்தியாவில், தங்க நகைகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டாலும், தங்கம் உற்பத்தி என்பது மிகவும் குறைவே. பெரும்பாலும் இறக்குமதியை நம்பியே உள்ளனர், இத்துறையினர்.‘உலக தங்க கவுன்சில்’ அண்மையில், ‘புல்லியன் டிரேட் இன் இந்தியா’ எனும் ஆழமான பகுபாய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றிருக்கும் சில குறிப்பிடத்தக்க விஷயங்கள்:
* கடந்த 2012ம் ஆண்டிலிருந்து, நாட்டில் அதிகாரப்பூர்வமாக, ஒவ்வொரு ஆண்டும் 760 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது
* அதிகாரப்பூர்வமற்ற முறையில் கடத்தல் வாயிலாகவும் தங்க இறக்குமதி நடைபெறுகிறது
* தங்க கடத்தல் முன்னர் கடல்வழியாக நடைபெற்றது, இப்போது ஆகாயம் மற்றும் தரை வழியாக அதிகம் நடைபெறுகிறது
* 2012ல் முதன் முதலாக வரியை அதிகரித்த பின், இதுவரை 6,581 டன் அளவுக்கு தங்கம் இறக்குமதி ஆகியுள்ளது.
* தங்கம்_ வெள்ளி கலவையான ‘டோரே’ இறக்குமதி, அதிகாரப்பூர்வ தங்க இறக்குமதியில் 30 சதவீதமாக உள்ளது
* இதனால் சுத்திகரிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2012 சுத்திகரிப்பு நிலையங்களின் எண்ணிக்கை 3 என இருந்தது 2020ல் 32 ஆக அதிகரித்துள்ளது
* இந்த சுத்திகரிப்பு நிலையங்கள் மொத்தம் 1,200_1400 டன் கலவையை சுத்திகரிக்கின்றன
* தங்க இறக்குமதியை விட டோரே இறக்குமதிக்கு வரி குறைவு என்பதால், அதன் இறக்குமதி அதிகரித்துள்ளது
* 2020ல், 377 டன் தங்க கட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை சுவிட்சர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது
* கடந்த சில ஆண்டுகளாக 100 கிராம் தங்க கட்டியாக இறக்குமதி செய்வது பிரபலமாகி வருகிறது. சிறு முகவர்களிடம் இதற்கான தேவை அதிகரித்துள்ளது
* இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வமான முறையில், ஆகாய மார்க்கமாக 11 நகரங்களில் தங்கம் இறக்குமதி நடைபெறுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|