அதிக பலன் அளிக்கும்  என்.பி.எஸ்.,திட்டம் அதிக பலன் அளிக்கும் என்.பி.எஸ்.,திட்டம் ... ஆயிரம் சந்தேகங்கள் வங்கி சேமிப்புகளுக்கு வட்டி உயராதா? ஆயிரம் சந்தேகங்கள் வங்கி சேமிப்புகளுக்கு வட்டி உயராதா? ...
வரி சேமிப்பு மூலம் அதிக பலன் பெறும் வழிகள்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2021
21:29

வருமான வரி சேமிப்பிற்கான வழிகள், வரிச் சலுகை பெற உதவுவதோடு, நிதி வளத்தை பெருக்கும் வகையிலும் அமைந்திருக்க வேண்டும்.

வருமான வரி செலுத்தும் வரம்பிற்குள் வருபவர்கள், வரிச் சலுகை பெறுவதற்கான பல்வேறு வழிகள் இருக்கின்றன. பரவலாக அறியப்பட்ட வருமான வரிச் சட்டத்தின், ‘80 சி’ பிரிவின் கீழ் குறிப்பிட்ட முதலீடுகள், காப்பீடு போன்றவை வரிச்சலுகை பெறுவதற்கு உரியதாக அமைகின்றன. இதே போல, வீட்டுக் கடன், மருத்துவ காப்பீடு போன்றவையும் வரிச் சலுகை பெற உதவும்.

வரி செலுத்துபவர்கள் இந்த வாய்ப்புகளில் தங்களுக்கு பொருத்தமானதை தேர்வு செய்து கொள்ளலாம் என்றாலும், இவற்றை சரியாக திட்டமிடுவது மிகவும் அவசியம். வரிச் சலுகைக்கு ஏற்ற வாய்ப்புகளை தேர்வு செய்வதோடு, அவை நிதி இலக்குகளுக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும்.

நிதி வளம்

வருமான வரி திட்டமிடலை துவக்கத்திலேயே மேற்கொள்ள வேண்டும் என நிதி வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர். வரிச் சலுகைக்கான வாய்ப்புகள் நிதி இலக்குகளுக்கும் உதவும் வகையில் அமைய திட்டமிடல் உதவும் என்கின்றனர். உதாரணமாக, 80 சி பிரிவின் கீழ், பி.எப்., பி.பி.எப்., ஐந்து ஆண்டு வைப்பு நிதி, காப்பீடு உள்ளிட்டவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றில் பெரும்பாலான முதலீடுகள் சிறுசேமிப்பு திட்டத்தின் கீழ் வருகின்றன. இந்த திட்டங்கள் சேமிப்பை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டவை. எனவே, ஓய்வூதிய பாதுகாப்பிற்கு உதவும் பி.எப்., அல்லது பி.பி.எப்., திட்டங்களில் செய்யும் முதலீடு வரிச் சலுகை பெற்றுத் தருவதோடு, நீண்ட கால நிதி இலக்கிற்கும் கைகொடுக்கும்.

மியூச்சுவல் பண்ட் திட்டமான இ.எல்.எஸ்.எஸ்., தேசிய பென்ஷன் திட்டம் உள்ளிட்டவையும் 80 சி பிரிவின் கீழ் வரும். இந்த பிரிவின் கீழ் பொருந்தும் வரம்பிற்கு ஏற்ப, முதலீடுகளை அமைத்துக் கொண்டால் வரிச் சலுகை, நிதி வளம் எனும் இரட்டிப்பு பலனை பெறலாம். எனினும், பழைய முறையிலான வருமான வரி திட்டத்தை தேர்வு செய்பவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்.

வேறு காரணங்களுக்காக புதிய வருமான வரி முறையை தேர்வு செய்திருந்தால், இந்த சலுகைகள் பொருந்தாது. இதே போல, வி.பி.எப்., எனப்படும் தானாக முன்வந்து அதிகம் செலுத்துவதற்கு உள்ள வாய்ப்பையும் பி.எப்., உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். வரிச் சலுகையோடு, ஓய்வு கால நிதியை பெருக்கவும் இது உதவும்.

மருத்துவ காப்பீடு

ஆயுள் காப்பீடு போலவே மருத்துவ காப்பீடும் நிதி திட்டமிடலில் முக்கியமாக வலியுறுத்தப்படுகிறது. போதுமான மருத்துவ காப்பீடு பெற்றிருப்பது நிதி ஆரோக்கியத்திற்கு வலு சேர்ப்பதோடு, இதற்கான பிரிவின் கீழ் வரிச் சலுகை பெறவும் உதவும். பொருந்தக்கூடிய மருத்துவ செலவுகள் மற்றும் பிள்ளைகள் படிப்பு செலவு போன்றவற்றுக்கான கழிவுகளையும் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

வீட்டுக் கடனுக்கான வட்டி தொகையும் வரிச் சலுகை பெற உதவும். இந்த கழிவுகள் தவிர மற்ற அம்சங்களை திட்டமிடலாம்.மாத சம்பளம் பெறுபவர் என்றால், தங்கள் ஊதிய அமைப்பையும் வரிச்சலுகை அதிகம் பெறும் வகையில் மாற்றி அமைத்துக்கொள்ள முயற்சிக்கலாம்.

வீட்டு வாடகை போன்ற படிகளுக்கு வரிச் சலுகை உண்டு. சம்பள விகிதம் இவ்விதமாக அமைந்திருப்பது அதிக பலன் தரும். எல்லாவற்றுக்கும் மேல் தாமதிக்காமல், உரிய காலத்தில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதன் மூலம் பலவித அனுகூலங்கள் உண்டு என்பதோடு, தேவையில்லாத அபராதத்தையும் தவிர்க்கலாம். நிதி இலக்குகளை மனதில் கொண்டு வரி சேமிப்புகளை மேற்கொள்வதன் மூலம் அதிக பலன் பெறலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)