வரி சேமிப்பு மூலம் அதிக பலன் பெறும் வழிகள்? வரி சேமிப்பு மூலம் அதிக பலன் பெறும் வழிகள்? ... ஆயிரம் சந்தேகங்கள் வங்கி சேமிப்புகளுக்கு வட்டி உயராதா? ஆயிரம் சந்தேகங்கள் வங்கி சேமிப்புகளுக்கு வட்டி உயராதா? ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை சரிவு கவலையை எதிர்கொள்வது எப்படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2021
21:32

பங்குச் சந்தை முதலீடு இடர்களுக்கு உட்பட்டது என்பது தெரிந்த விஷயம் தான். சந்தையின் ஏற்ற இறக்கம் முதலீட்டின் பலன் மீது தாக்கம் செலுத்தும் என்பதும் தெரிந்த விஷயம் தான். நீண்ட கால நோக்கிலான முதலீடே, சந்தையின் ஏற்ற இறக்கத்தை மீறி பலன் பெறுவதற்கான வழியாக வலியுறுத்தப்படுகிறது.

ஏற்ற இறக்கம் சந்தையில் இயல்பு தான் என்றாலும், திடீரென சந்தை சரியும் போது முதலீட்டாளர்கள் அச்சமும், கவலையும் கொள்வது இயல்பானதே. பதற்றம் சந்தையில் இருந்து வெளியேற வைக்கலாம். சந்தை சரிவால் ஏற்படக்கூடிய நிலையை எதிர்கொள்வதற்கான வழிகளை பார்க்கலாம்.
எவ்வளவு தொகை:

பங்குச் சந்தையில் நீண்ட கால முதலீடு தேவை என வலியுறுத்தப்படுவதால், ஒருவர் உடனடியாக தேவைப்படக்கூடிய தொகையை சந்தையில் முதலீடு செய்யக்கூடாது. நீண்ட கால நோக்கில் முதலீடு செய்து, சந்தை சரிவுக்கு பின் மீட்சி ஏற்படும் வரை காத்திருந்து பலன் பெறலாம். இத்தகைய தொகையை முதலீடு செய்யலாம்.

நிதி திட்டமிடல்:

நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யக்கூடிய தொகையை அறிய நிதி திட்டமிடல் கைகொடுக்கும். நிதி இலக்குகளின் அடிப்படையில் இந்த தொகையை தீர்மானிக்கலாம். இது இடர்களை குறைக்க உதவும். மேலும் பரவலாக்க உத்தி மூலமும் இடர்களை எதிர்கொள்ளலாம்.

எளிய வழி:

சிறு முதலீட்டாளர்களை பொறுத்தவரை சீரான முதலீட்டிற்கான வாய்ப்பாக அமையும் எஸ்.ஐ.பி., முறையில் சம பங்கு மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்யலாம். படிப்படியாகவும் முதலீட்டை மேற்கொள்ளலாம். சந்தையின் ஏற்ற இறக்கம் பற்றி கவலைப்படாமல் முதலீட்டை தொடர்வது ஏற்றது.

யாருக்கு கவலை? :

எனினும், நிதி இலக்குகளுக்கு நெருக்கமாக வந்திருப்பவர்கள் சந்தை சரிவின் போது கவலை கொள்வது பொருத்தமானதே. இவர்கள் சந்தை ஏற்றத்தில் இருக்கும் போது, மேலும் உயர்வுக்கு காத்திருக்காமல் முதலீட்டை விலக்கிக் கொள்வது நல்லது. ஓய்வு காலம், குழந்தைகள் உயர் கல்வி இலக்கு இதற்கான உதாரணம்.

எதிர்பார்த்த பலன்:

இதே போல, நீண்ட கால இலக்குகளுக்கு முதலீடு செய்தவர்கள், அதற்கு தேவையான தொகை முதலீட்டில் சேர்ந்திருந்தாலும், மேலும் உயர்வுக்கு காத்திருக்காமல் முதலீட்டை விலக்கிக் கொள்ளலாம். சரிவு தொடர்பான அச்சம் இருந்தால், பாதுகாப்பிற்காக ஒரு பகுதியை விலக்கிக் கொள்ளலாம்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)