ட்ரோன் சேவையை வழங்க ‘ஸ்பைஸ்ஜெட்’ தீவிரம் ட்ரோன் சேவையை வழங்க ‘ஸ்பைஸ்ஜெட்’ தீவிரம் ...  எச்.எம்.டி., சிரிஞ்சு ஆலைகள் உற்பத்தியை தொடர அனுமதி எச்.எம்.டி., சிரிஞ்சு ஆலைகள் உற்பத்தியை தொடர அனுமதி ...
ஐந்து மாதமாக கட்டுக்குள் இருக்கும் 'சில்லரை விலை பணவீக்கம்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2021
10:02


புதுடில்லி : கடந்த நவம்பர் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம் 4.91 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.


கடந்த அக்டோபர் மாதத்தில் 4.48 சதவீதமாக இருந்த நிலையில், நவம்பரில் 4.91 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு பழங்கள், காய்கறிகள் விலை அதிகரித்தது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.‘ரிவர்ஸ் ரெப்போ’இருப்பினும், கடந்த ஐந்து மாதங்களாக சில்லரை விலை பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் இலக்குக்குள்ளேயே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு நிதியாண்டில், சில்லரை விலை பணவீக்கம் 6 சதவீதத்துக்குள் இருக்க, ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்துஉள்ளது. அந்த வகையில், தொடர்ந்து ஐந்து மாதங்களாக, சில்லரை பணவீக்கம் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அளவிற்குள் இருந்து வருகிறது.ரிசர்வ் வங்கி, சில்லரை விலை பணவீக்கத்தின் அடிப்படையில், அதன் பணக் கொள்கையை உருவாக்குகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு கூடி, அது குறித்த கொள்கை முடிவுகளை அறிவிக்கிறது.

சில்லரை விலை பணவீக்க அடிப்படையில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கிறது. அதுபோல, வங்கிகளிடம் இருந்து, ரிசர்வ் வங்கி பெறும் குறுகிய கால கடனுக்கான ‘ரிவர்ஸ் ரெப்போ’ வட்டி விகிதமும் நிர்ணயிக்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டில், ரிசர்வ் வங்கி சில்லரை விலை பணவீக்கம் 5.3 சதவீதமாக இருக்கும் என கணித்து அறிவித்துள்ளது.மேலும், இரண்டாவது காலாண்டில் 5.1 சதவீதம்; மூன்றாவது காலாண்டில் 4.5 சதவீதம்; கடைசி காலாண்டில் 5.8 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)