பதிவு செய்த நாள்
14 டிச2021
10:02
புதுடில்லி : கடந்த நவம்பர் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம் 4.91 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் 4.48 சதவீதமாக இருந்த நிலையில், நவம்பரில் 4.91 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு பழங்கள், காய்கறிகள் விலை அதிகரித்தது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.‘ரிவர்ஸ் ரெப்போ’இருப்பினும், கடந்த ஐந்து மாதங்களாக சில்லரை விலை பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் இலக்குக்குள்ளேயே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதியாண்டில், சில்லரை விலை பணவீக்கம் 6 சதவீதத்துக்குள் இருக்க, ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்துஉள்ளது. அந்த வகையில், தொடர்ந்து ஐந்து மாதங்களாக, சில்லரை பணவீக்கம் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அளவிற்குள் இருந்து வருகிறது.ரிசர்வ் வங்கி, சில்லரை விலை பணவீக்கத்தின் அடிப்படையில், அதன் பணக் கொள்கையை உருவாக்குகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு கூடி, அது குறித்த கொள்கை முடிவுகளை அறிவிக்கிறது.
சில்லரை விலை பணவீக்க அடிப்படையில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கிறது. அதுபோல, வங்கிகளிடம் இருந்து, ரிசர்வ் வங்கி பெறும் குறுகிய கால கடனுக்கான ‘ரிவர்ஸ் ரெப்போ’ வட்டி விகிதமும் நிர்ணயிக்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டில், ரிசர்வ் வங்கி சில்லரை விலை பணவீக்கம் 5.3 சதவீதமாக இருக்கும் என கணித்து அறிவித்துள்ளது.மேலும், இரண்டாவது காலாண்டில் 5.1 சதவீதம்; மூன்றாவது காலாண்டில் 4.5 சதவீதம்; கடைசி காலாண்டில் 5.8 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|