பதிவு செய்த நாள்
14 டிச2021
19:56
புதுடில்லி:பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரரான சச்சின் டெண்டுல்கர், பழைய கார் விற்பனை தளமான ‘ஸ்பின்னி’ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.இந்நிறுவனத்தில் அவர் முதலீடு செய்திருப்பதுடன், அதன் பிராண்டு துாதுவராகவும் பொறுப்பேற்றுள்ளார்.
டெண்டுல்கர் முதலீடு செய்திருப்பது குறித்து அறிவித்துள்ள ஸ்பின்னி நிறுவனம், அவர் எவ்வளவு முதலீடு செய்துள்ளார் என்பது குறித்த தகவல் எதையும் அறிவிக்கவில்லை.
இது குறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில், ‘செயல்திறன், தாக்குப்பிடித்தல், தொடர்ச்சியான முன்னேற்றம் ஆகியவற்றுக்கான எடுத்துக்காட்டாக இருக்கும் ஒருவருடன் இணைந்து பணியாற்றுவதற்காக சச்சினை நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது’ என தெரிவித்துள்ளது.
ஸ்பின்னி நிறுவனம் ஏற்கனவே இந்த ஆண்டு துவக்கத்தில் பி.வி.சிந்துவுடன் கூட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது.கொரோனா தாக்கத்துக்கு பின், இளைய தலைமுறையினர் பழைய கார்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருவதன் தொடர்ச்சியாக, இந்த துறை எழுச்சி பெற்று வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|