பதிவு செய்த நாள்
14 டிச2021
19:59
மும்பை:உலகளாவிய விளையாட்டு அணிகலன்களுக்கான பிராண்டான ‘ரீபாக்’கின் இந்திய செயல்பாடுகளுக்கான உரிமையை, ‘ஆதித்ய பிர்லா குழுமம்’ பெற்றுள்ளது. இதற்காக, ஆதித்ய பிர்லா குழுமம் ‘ஆத்தன்டிக் பிராண்டு’ குழுமத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியாவில் ரீபாக் தயாரிப்புகளுக்கான மொத்த விற்பனை, சில்லரை விற்பனை, மின்னணு வர்த்தக விற்பனை மற்றும் சில்லரை விற்பனை ஸ்டோர்கள் ஆகியவற்றின் உரிமை ‘ஆதித்ய பிர்லா பேஷன் அண்டு ரீடெய்ல்’ நிறுவனத்துக்கு வழங்கப்படுகிறது.
ஆத்தன்டிக் பிராண்டு குழுமம், ரீபாக் தயாரிப்புகளுக்கான உலகளாவிய பிரான்ச்சைஸ் உரிமம் பெற்ற நிறுவனமாகும்.இதன் வாயிலாக ஆதித்ய பிர்லா நிறுவனம், அண்மை காலமாக வேகமான வளர்ச்சியை கண்டு வரும் விளையாட்டு அணிகலன்களுக்கான துறையில் காலடி எடுத்து வைக்கிறது. இந்த துறை, ஆண்டுக்கு 14 சதவீத வளர்ச்சியை தற்போது கண்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|