பதிவு செய்த நாள்
15 டிச2021
17:49
இந்தியாவின் முன்னணி காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான டாடா ஏஐஏ லைப் இன்ஸ்சூரன்ஸ் தனது சேவைகளை விரிவாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் புதிதாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட 6 கிளைகளை திறந்துள்ளது. இந்த புதிய கிளைகள் ஓசூர், காஞ்சிபுரம், அடையார், ஆர்எஸ்புரம், பூந்தமல்லி மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் திறக்கப்பட்டுள்ளன.
இந்த காப்பீட்டு நிறுவனம் தற்போது 25 மாநிலங்களில் 218-க்கும் அதிகமான கிளைகளை கொண்டுள்ளது. அதே நேரத்தில் ஏஜென்சி, புரோக்கிங், பேங்காஸ்யூரன்ஸ், அசிஸ்டடு பர்சேஸ் மற்றும் ஆன்லைன் தளத்தில் மிகவும் வலுவான இடத்தை கொண்டுள்ளது. இந்த விரிவாக்க நடவடிக்கையானது டாடா ஏஐஏ லைப் நிறுவனத்தின் வணிக வளர்ச்சி உத்திக்கான ஒரு பகுதியாகும். அதே போல வாடிக்கையாளர் சேவை மையம் மற்றும் தமிழகத்தில் காப்பீட்டுத்துறையில் தொழில்துறையின் பங்களிப்பு ஆகியவற்றை அதிகரிக்கச் செய்வதற்கான பங்களிப்பையும் அளிக்கிறது. இந்த விரிவாக்கத்தின் மூலம் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கிளைகள் திறப்பு குறித்து டாடா ஏஐஏ லைப் இன்சூரன்ஸ் தலைமை செயல் அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குநர் நவீன் தஹில்யானி கூறுகையில், “இந்த கிளைகள் டிஜிட்டல் மயமாக்கப் பட்டிருப்பதால், புதிய யுகத்தின் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்ய, அவை நம்மை அனுமதிக்கும். அதே நேரத்தில் ஆயுள் காப்பீட்டு துறையை இன்னும் வலுவாக்கி விரைவுபடுத்தும் அரசின் முயற்சிகளை ஆதரிக்கவும், மேலும் தொடரும் பெருந்தொற்றின் தொடர்பான பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் செயல்முறைகளை பராமரிக்கவும் உதவும்” என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|