பதிவு செய்த நாள்
16 டிச2021
09:42
திருப்பூர் : நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, 71 ஆயிரத்து, 601 கோடி ரூபாயை எட்டியுள்ளது; இது, கடந்த நிதியாண்டைவிட, 37.24 சதவீதம் அதிகம்.
நடப்பு 2021 - 22ம் நிதியாண்டில், மாதந்தோறும் ஆயத்த ஆடை ஏற்றுமதி உயர்ந்து வருகிறது. ஏப்., - நவ., வரையிலான எட்டு மாதங்களில், ஆயத்த ஆடை ஏற்றுமதி, 37.24 சதவீதம் அதிகரித்து, 71ஆயிரத்து, 601 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது, கடந்த, 2020-21ம் நிதியாண்டின் இதே காலத்தில், 52 ஆயிரத்து, 173 கோடி ரூபாயாக இருந்தது.
கடந்த ஆண்டு நவம்பரில், 7ஆயிரத்து,746 கோடி ரூபாய்க்கு மேற்கொள்ளப்பட்ட ஆயத்த ஆடை ஏற்றுமதி, இந்தாண்டு நவம்பரில் 7 ஆயிரத்து 987 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில், ஏப்., முதல் நவ., வரையிலான எட்டு மாதங்களில், பின்னலாடை ஏற்றுமதி, 38 ஆயிரத்து 476 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதில், பின்னலாடை நகரமான திருப்பூரின் ஏற்றுமதி, 20 ஆயிரத்து 454 கோடி ரூபாயாக உள்ளது.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|