பதிவு செய்த நாள்
16 டிச2021
09:59
புதுடில்லி : புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையைச் சேர்ந்த, 'கிளீன் மேக்ஸ் ஆரிகா பவர்' நிறுவனத்தின், 33 சதவீத பங்குகளை, 'சிப்லா' நிறுவனம் வாங்கி உள்ளது.
மும்பையைச் சேர்ந்த சிப்லா நிறுவனம், பல்வேறு நோய்களுக்கான மருந்துகளை தயாரித்து வருகிறது. இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனமான சிப்லா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையைச் சேர்ந்த கிளீன் மேக்ஸ் ஆரிகா பவர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியுள்ளது.
இதுகுறித்து சிப்லா நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கிளீன் மேக்ஸ் ஆரிகா பவர் நிறுவனத்தின், 33 சதவீத பங்குகளை, 6 கோடி ரூபாய்க்கு வாங்க நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் வாயிலாக, சிப்லா குழுமத்தில் கிளீன் மேக்ஸ் நிறுவனம் ஐக்கியம் ஆகி உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிளீன் மேக்ஸ் ஆரிகா பவர் நிறுவனம், சூரிய ஒளி, காற்று உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி காரணிகளில் இருந்து மின் உற்பத்தி செய்து, வினியோகித்து வருகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|