பதிவு செய்த நாள்
16 டிச2021
10:03
புதுடில்லி : சி.எம்.எஸ்., இன்போ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு,வரும், 21ல் துவங்கி, 23ல் முடிவடைகிறது.
சி.எம்.எஸ்., இன்போ சிஸ்டம்ஸ் நிறுவனம், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்னணு வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கான ஏ.டி.எம்., சேவைகள், ரொக்கப் பட்டுவாடா போன்ற சேவைகளை வழங்கி வருகிறது. புதிய பங்கு வெளியீட்டில், 2 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டிருந்த இந்நிறுவனம், சந்தை நிலவரம் சரியில்லாததால், ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக பங்கு வெளியீட்டு விலையை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிறுவனம், 2017ல் புதிய பங்கு வெளியீட்டிற்கு விண்ணப்பித்திருந்தது. இதற்கு பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்தபோதிலும், பங்கு வெளியீட்டு திட்டத்தை தள்ளி வைத்தது. தற்போது இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டை ஆக்சிஸ் கேப்பிடல், ஜெப்பரிஸ் இந்தியா, ஜே.எம்.பைனான்சியல், டி.ஏ.எம்., கேப்பிடல் அட்வைசர்ஸ் ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|