நிறுவனங்களில் துணிகர முதலீடு  நவம்பரில் இரு மடங்கு உயர்வு நிறுவனங்களில் துணிகர முதலீடு நவம்பரில் இரு மடங்கு உயர்வு ...  அமேசான்  விற்பனையாளர்கள் எண்ணிக்கை 10 லட்சமாக உயர்வு அமேசான் விற்பனையாளர்கள் எண்ணிக்கை 10 லட்சமாக உயர்வு ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
28 ஆண்டுக்குப் பின் மீண்டும் அழகு சாதன துறையில் டாடா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2021
21:47

மும்பை:டாடா குழுமம், 28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அழகு சாதனப் பொருட்கள் துறையில் கால் பதிக்க திட்டமிட்டு உள்ளது.
டாடா குழுமம், உப்பு முதல் உலோகம் வரை ஏராளமான வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகிறது. இக்குழுமம், அழகு சாதன சந்தையில் மீண்டும் கால் பதிக்க உள்ளது.

பெண்களிடம் வரவேற்பு
கடந்த, 1953ல், டாடா குடும்பத்தைச் சேர்ந்த சிமோனி டாடா என்பவரின் துணையில், புதுமையான முக அழகு கிரீம் தயாரிக்கப்பட்டது.நாள் முழுதும் முகப் பவுடர் கலையாமல், பொலிவாக காட்சி அளிக்க உதவும் இந்த கிரீமிற்கு இந்திய கடவுளான மகாலட்சுமியை குறிக்கும் வகையில், பிரெஞ்சு மொழியில் ‘லாக்மி’ என பெயரிடப்பட்டது.
இந்திய அழகு சாதன துறையில் முதன் முறையாக ‘பிராண்டு’ பெயரில் அறிமுகமான லேக்மிக்கு பெண்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. எனினும், டாடா குழுமம், 1998ல், லேக்மி பிராண்டை, யூனிலிவர் நிறுவனத்தின் இந்திய பிரிவிற்கு விற்பனை செய்து விட்டது.

இந்நிலையில், டாடா குழுமம், அதன் ‘டிரென்ட்’ நிறுவனம் வாயிலாக, மீண்டும் அழகு சாதனப் பொருட்கள் விற்பனையில் களமிறங்க உள்ளது.இது குறித்து, டிரென்ட் நிறுவனத்தின் செயல் சாரா இயக்குனர், நோயல் டாடா கூறியதாவது:என் தாயார் சிமோனி டாடா உருவாக்கிய லேக்மியை தொடர்ந்து எண்ணற்ற அழகுப் பொருட்கள் இந்திய சந்தையை கலக்கி வருகின்றன.

எதிர்பார்ப்பு
கடந்த, 2017 நிலவரப்படி, இந்திய அழகு சாதனங்களின் சந்தை மதிப்பு, 82 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இது, 2025ல், இரு மடங்கு உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. எனவே, 28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அழகு சாதன பொருட்கள் விற்பனையில் இறங்க உள்ளோம். அத்துடன், காலணி, உள்ளாடை ஆகியவற்றின் வர்த்தகத்தையும் துவக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

அழகு சாதன சந்தையில் ‘ஹிந்துஸ்தான் யூனிலிவர், நைக்கா’ போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக டாடா குழுமம் உருவெடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)