பதிவு செய்த நாள்
16 டிச2021
21:56
புதுடில்லி:வலைதளம் வாயிலாக ரியல் எஸ்டேட் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் ‘ஸ்கொயர் யார்ட்ஸ்’ நிறுவனம், பங்கு வெளியீட்டில் களமிறங்கி, 1,500 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்துள்ளது.
ஹரியானா மாநிலம், குருகிராமைச் சேர்ந்த ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமான, ஸ்கொயர் யார்ட்ஸ், ரியல் எஸ்டேட் துறையில் வீட்டு வசதி கடன், சொத்து விற்பனை, வாடகை வீடு போன்றவற்றுக்கான ஆலோசனைகளை, தரகு கட்டண அடிப்படையில் வழங்கி வருகிறது.
சில மாதங்களுக்கு முன் இந்நிறுவனம், ‘அசுரா, பிராப்ஸ் ஏ.சி., பிராப்வி ஆர்’ ஆகிய மூன்று நிறுவனங்களை கையகப்படுத்தியது.கடந்த, 2020 – 2021ம் நிதியாண்டில் இந்நிறுவனம், கட்டுமான நிறுவனங்கள் சார்பாக, 6ஆயிரத்து, 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களின் விற்பனைக்கு உதவியுள்ளது.
மேலும் 1,900 கோடி ரூபாய் வீட்டு வசதி கடன் பெற துணை புரிந்துள்ளது. இந்நிலையில், புதிய பங்கு வெளியீட்டில் கிடைக்கும் வருவாயில், பழைய கடன்களை திரும்ப அளிக்கவும், வர்த்தகத்தை விரிவுபடுத்தவும், ஸ்கொயர் யார்ட்ஸ் திட்டமிட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|