பதிவு செய்த நாள்
17 டிச2021
21:27
புதுடில்லி:நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கடனுக்கான அடிப்படை வட்டியை 0.10 சதவீதம் உயர்த்தியுள்ளது.இதையடுத்து, இவ்வங்கியின் அடிப்படை வட்டி விகிதம், 7.55 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் முதல் புதிய வட்டி விகிதம் அமலுக்கு வந்துள்ளது.இந்த வட்டி உயர்வால், 2019 ஜனவரிக்கு முன் கடன் வாங்கியோரின் கடன் தவணை காலம் அதிகரிக்கும். இக்காலத்திற்கு பின் கடன் வாங்கியோருக்கு, வட்டி உயர்வால் பாதிப்பு இருக்காது. ஏனெனில், 2019 முதல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ரிசர்வ் வங்கியின் ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை பின்பற்றி கடனுக்கான வட்டியை நிர்ணயித்து வருகிறது.
ரிசர்வ் வங்கி, ஒன்றரை ஆண்டுகளாக ரெப்போ வட்டியை, 4 சதவீதம் என்ற அளவிலேயே மாற்றமின்றி வைத்துள்ளது. அதனால், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் ரெப்போ அடிப்படையில் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாமல் உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|