வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  உடல் பரிசோதனை துறைக்கு கைகொடுக்கும் கொரோனா உடல் பரிசோதனை துறைக்கு கைகொடுக்கும் கொரோனா ...
முன்கூட்டியே செலுத்திய வரி ரூ.3.45 லட்சம் கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2021
21:34

புதுடில்லி:இந்தாண்டு ஏப்., – டிச., 16 வரையிலான காலத்தில், நிறுவனங்களும், தனி நபர்களும் முன்கூட்டியே செலுத்திய வருமான வரி, 65.5 சதவீதம் உயர்ந்து, 3 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நிறுவனங்கள், அவற்றின் வர்த்தக நிலவரத்திற்கு ஏற்ப, வருமான வரியை உத்தேசமாக கணக்கிட்டு முன்கூட்டியே செலுத்துகின்றன.
அதிகரிப்பு
அதன்பின் முழு நிதியாண்டிற்கான வரியை கணக்கிட்டு, சலுகைகள் போக கூடுதலாக செலுத்திய தொகையை திரும்பப் பெறுகின்றன.இதன்படி, நடப்பு 2021 – 22ம் நிதியாண்டில் ஏப்., 1 – டிச., 16 வரையிலான காலத்தில் நிறுவனங்கள், தனிநபர்கள் செலுத்திய முன்கூட்டிய வரி, 65.5 சதவீதம் உயர்ந்து, 3 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
இது, கடந்த 2020–21ம் நிதியாண்டின் இதே காலத்தில், 2 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது.இதில் நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி, 55 சதவீதம் உயர்ந்து, 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து, 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வளர்ச்சி பாதை
தனிநபர் செலுத்திய வரி, 98 சதவீதம் வளர்ச்சி கண்டு, 47 ஆயிரத்து 865 கோடி ரூபாயில் இருந்து 97 ஆயிரத்து 719 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நடப்பு நிதியாண்டில் அக்., – டிச., 16 வரை முன்கூட்டிய வரி வசூல், 90 சதவீதம் உயர்ந்து, 49 ஆயிரத்து 536 கோடியில் இருந்து, 94ஆயிரத்து 107 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதில், நிறுவனங்கள் செலுத்திய வரி, 75 சதவீதம் உயர்ந்து, 31 ஆயிரத்து 107 கோடியில் இருந்து, 54 ஆயிரத்து 445 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. இதே காலத்தில் தனி நபர் செலுத்திய முன்கூட்டிய வரி வாயிலான வசூல், 115 சதவீதம் உயர்ந்து, 39 ஆயிரத்து 662 கோடி ரூபாயாக அதிகரித்துஉள்ளது.
முன்கூட்டியே செலுத்தும் வரி அதிகரித்திருப்பது, நாட்டின் பொருளாதாரம், வளர்ச்சிப் பாதையில் செல்வதை குறிப்பதாக வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)