பதிவு செய்த நாள்
17 டிச2021
21:34
புதுடில்லி:இந்தாண்டு ஏப்., – டிச., 16 வரையிலான காலத்தில், நிறுவனங்களும், தனி நபர்களும் முன்கூட்டியே செலுத்திய வருமான வரி, 65.5 சதவீதம் உயர்ந்து, 3 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நிறுவனங்கள், அவற்றின் வர்த்தக நிலவரத்திற்கு ஏற்ப, வருமான வரியை உத்தேசமாக கணக்கிட்டு முன்கூட்டியே செலுத்துகின்றன.
அதிகரிப்பு
அதன்பின் முழு நிதியாண்டிற்கான வரியை கணக்கிட்டு, சலுகைகள் போக கூடுதலாக செலுத்திய தொகையை திரும்பப் பெறுகின்றன.இதன்படி, நடப்பு 2021 – 22ம் நிதியாண்டில் ஏப்., 1 – டிச., 16 வரையிலான காலத்தில் நிறுவனங்கள், தனிநபர்கள் செலுத்திய முன்கூட்டிய வரி, 65.5 சதவீதம் உயர்ந்து, 3 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
இது, கடந்த 2020–21ம் நிதியாண்டின் இதே காலத்தில், 2 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது.இதில் நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி, 55 சதவீதம் உயர்ந்து, 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து, 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வளர்ச்சி பாதை
தனிநபர் செலுத்திய வரி, 98 சதவீதம் வளர்ச்சி கண்டு, 47 ஆயிரத்து 865 கோடி ரூபாயில் இருந்து 97 ஆயிரத்து 719 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நடப்பு நிதியாண்டில் அக்., – டிச., 16 வரை முன்கூட்டிய வரி வசூல், 90 சதவீதம் உயர்ந்து, 49 ஆயிரத்து 536 கோடியில் இருந்து, 94ஆயிரத்து 107 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதில், நிறுவனங்கள் செலுத்திய வரி, 75 சதவீதம் உயர்ந்து, 31 ஆயிரத்து 107 கோடியில் இருந்து, 54 ஆயிரத்து 445 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. இதே காலத்தில் தனி நபர் செலுத்திய முன்கூட்டிய வரி வாயிலான வசூல், 115 சதவீதம் உயர்ந்து, 39 ஆயிரத்து 662 கோடி ரூபாயாக அதிகரித்துஉள்ளது.
முன்கூட்டியே செலுத்தும் வரி அதிகரித்திருப்பது, நாட்டின் பொருளாதாரம், வளர்ச்சிப் பாதையில் செல்வதை குறிப்பதாக வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|