பதிவு செய்த நாள்
18 டிச2021
19:15
மும்பை:கழிவுகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சாதனங்களை வாங்க, சென்னையை சேர்ந்த நிறுவனத்திடம், கானா நாட்டை சேர்ந்த, ‘மாஸ்ரி’ என்ற நிறுவனம், 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், ‘ஆர்டர்’ செய்துள்ளது.
சென்னையை சேர்ந்த, ‘ராம் சரண்’ என்ற ரசாயன தயாரிப்பு நிறுவனம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிறுவனத்தின் 46 சதவீத பங்குகளை, 31 ஆயிரத்து, 480 கோடி ரூபாய்க்கு, அமெரிக்காவை சேர்ந்த, ‘டி.எப்.சி.சி., இன்டர்நேஷனல்’ நிறுவனம் வாங்க உள்ளது.
இந்நிலையில்,ஆப்ரிக்காவில் உள்ள கானா நாட்டைச் சேர்ந்த மாஸ்ரி நிறுவனம், 16 ஆயிரத்து 730 கோடி ரூபாய்க்கு, கழிவுகளில் இருந்து மின்சார உற்பத்தி செய்யும் சாதனங்களை ராம் சரண் நிறுவனத்திடம் வாங்க ‘ஆர்டர்’ தந்துள்ளது.ராம்சரண் நிறுவனத்தின் இயக்குனர் கவுஷிக் பலிச்சா கூறியதாவது:மாஸ்ரி நிறுவனத்திற்கு, 16 ஆயிரத்து 730 கோடி ரூபாயில், கழிவுகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சாதனங்களை ஏற்றுமதி செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|