பதிவு செய்த நாள்
19 டிச2021
21:48
ரியல் எஸ்டேட் துறையில் வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், அலுவலக குத்தகை மற்றும் மால்கள் பிரிவில் மீட்சி ஏற்பட்டு வருவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ரியல் எஸ்டேட் துறை தொடர்பாக ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரீட்டிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 2022ம் ஆண்டில் இத்துறையில் தற்போதைய வளர்ச்சி நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஓட்டல்கள், மால்கள் பிரிவில் அக்டோபர் மாத காலத்தில் தேக்கம் நிலவியதற்கு மாறாக, தற்போது இந்த பிரிவில் வளர்ச்சிக்கான அறிகுறிகள் தோன்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தில் புதிய கட்டுமான திட்டங்கள் துவக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்னதாகவே பல நிறுவனங்கள் புதிய திட்டங்களை துவங்கிவிட்டதாகவும், கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு குறைந்தது, குறைந்த வட்டி விகிதம் உள்ளிட்டவை இதற்கு காரணமாக அமைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் துறையில் வளர்ச்சி தொடரும் என எதிர்பார்ப்பதாகவும், புதிய திட்டங்கள் வாயிலாக விற்பனை அதிகரிக்கும் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. பலவீனமான நிறுவனங்கள் வெளியேறி வரும் நிலையில், பெரிய நிறுவனங்கள் தங்களை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|