கேமரா கண்காட்சிகள் மூலம் வாடிக்கையாளார்களை கவரும் கேனான்கேமரா கண்காட்சிகள் மூலம் வாடிக்கையாளார்களை கவரும் கேனான் ...  சில்லரை விற்பனை நவம்பரில் அதிகரிப்பு சில்லரை விற்பனை நவம்பரில் அதிகரிப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஒமைக்ரான் பீதி : அஞ்சி இறங்குது பங்குச்சந்தை ; ஒரேநாளில் ரூ.9 லட்சம் கோடி ‛அவுட்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2021
16:22

மும்பை : ஒமைக்ரான் அச்சுறுத்தல் மீண்டும் உலகளவில் வேகமாக பரவி வருவதால் அதன் தாக்கம் பங்குச்சந்தைகளில் எதிரொலித்தது. இதனால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று(டிச., 20) கடும் சரிவை சந்தித்தன. இன்று ஒரேநாளில் மட்டும் ரூ.9 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தாக்கத்திலிருந்து மெல்ல மீண்டு வந்த இந்திய உள்ளிட்ட உலக பங்குச்சந்தைகள் இப்போது உருமாறிய ஒமைக்காரன் வைரஸ் பரவலால் மீண்டும் அச்சத்தை சந்தித்துள்ளன. டெல்டா வைரஸை விட இந்த வகை வைரஸ் வேகமாக பரவுவதால் மீண்டும் பொதுமுடக்கம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தெரிகிறது. இதனால் மீண்டும் தொழில்துறையில் சுணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன்காரணமாக உலகளவில் பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவுகிறது. இதன் தாக்கமாக இன்றைய வர்த்தகவாரத்தின் முதல்நாளிலேயே இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1028.61 புள்ளிகள் சரிந்து 55,983.13ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 307.50 புள்ளிகள் சரிந்து 16,677.70ஆகவும் துவங்கின. உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு, ஒமைக்காரன் அச்சுறுத்தல், கடன் வட்டி விகிதங்களை சீனா குறைத்தது, முன்னணி நிறுவனங்கள் சரிவு, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது உள்ளிட்ட பல காரணங்களால் இன்றைய வர்த்தகம் நாள் முழுக்க அதிக சரிவிலேயே வர்த்தகமாகின. குறிப்பாக மதியம் 2 மணியளவில் 1849 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்தது. கடந்த ஏப்ரலுக்கு பின் இன்றைய வர்த்தகத்தில் தான் இந்த அளவு சரிவு ஏற்பட்டது. பின் வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸ் 1,189.73 புள்ளிகள் சரிந்து 55,822.01ஆகவும், நிப்டி 371 புள்ளிகள் சரிந்து 16,614.20ஆகவும் நிறைவடைந்தன.

ரூ.9 லட்சம் கோடி ‛அவுட்'
வாரத்தின் முதல்நாளிலேயே பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்ததன் காரணமாக இன்று ஒரேநாளில் மட்டும் ரூ.9 லட்சம் கோடி இழப்பை முதலீட்டாளர்கள் சந்தித்துள்ளனர். இதன்மூலம் மும்பை பங்குச்சந்தையின் மூலதன மதிப்பு ரூ259.4 லட்சம் கோடியிலிருந்து ரூ.250லட்சம் கோடியாக சரிந்துள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)