பதிவு செய்த நாள்
21 டிச2021
08:53
புதுடில்லி : பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., நடப்பு நிதியாண்டுக்குள் ஐ.பி.ஓ., எனும், புதிய பங்கு வெளியீட்டுக்கு வர வாய்ப்பில்லை என்கிறார்கள்.
இன்னும் நிறுவனத்தை மதிப்பீடு செய்யும் பணி முடியவில்லை. மேலும், புதிய பங்கு வெளியீட்டுக்கான ஆயத்த பணிகள் முடிவடையவே, இன்னும் கூடுதல் நாட்கள் தேவைப்படும் என, துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
பங்கு வெளியீட்டுக்கு முன்பாக, நிறுவனத்தின் மதிப்பை கணக்கிடும் பணிகள் துவங்கி உள்ளன. இருப்பினும், நிறுவனத்தின் அளவு, அதன் பலதரப்பட்ட காப்பீட்டு திட்டங்கள், ரியல் எஸ்டேட் சொத்துக்கள் என, பல விஷயங்களில் உள்ள சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை.
மதிப்பீட்டு பணிகள் முடிவடைந்தாலும், அதன்பின் ஒழுங்குமுறை அமைப்புகள் சம்பந்தப்பட்ட பல நடைமுறைகள் உள்ளன. எனவே, நடப்பு நிதியாண்டுக்குள்ளாக எல்.ஐ.சி., பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு வாய்ப்பு மிக குறைவாகவே உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, 'முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை' துறையின் செயலர் துஹின் காந்தா பாண்டே, புதிய பங்கு வெளியீடு, திட்டமிட்டுள்ளபடி நடப்பு நிதியாண்டிலேயே நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|