பதிவு செய்த நாள்
21 டிச2021
09:55
புதுடில்லி : நாட்டின் சில்லரை விற்பனை, நவம்பர் மாதத்தில் 9 சதவீதம் அதிகரித்துள்ளதாக, இந்திய சில்லரை விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடந்த நவம்பர் மாதத்தில், நாட்டின் சில்லரை விற்பனை, முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது, 9 சதவீதம் அதிகரித்துள்ளது. மூன்றாவது அலை குறித்த அச்சம், 'ஒமைக்ரான்' பரவல் போன்றவற்றையும் மீறி, சில்லரை விற்பனை அதிகரித்துள்ளது.நாட்டின் மேற்கு பகுதியை சேர்ந்த மாநிலங்களில், விற்பனை 11 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. கிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் 9 சதவீதமும்; வட மாநிலங்களில் 6 சதவீதமும் விற்பனை அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு பின், தற்போது சில்லரை வணிகம் மேம்பட்டு வருகிறது. வரும் மாதங்களிலும் இந்த போக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த அக்டோபரில் எலக்ட்ரானிக்ஸ், நுகர்வோர் சாதனங்கள் பிரிவில் பெரிய அளவில் வளர்ச்சி எட்டப்படாத நிலையில், நவம்பரில் 32 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. விளையாட்டு பொருட்கள் விற்பனை 18 சதவீதம் அதிகரித்துள்ளது. மற்றபடி காலணிகள், அழகு சாதனப் பொருட்கள், மரச்சாமான்கள் போன்றவற்றின் விற்பனை, நவம்பரில் சற்று மீட்சி கண்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|