பதிவு செய்த நாள்
21 டிச2021
10:03
ராயல் என்பீல்டு அறிவிப்பு
‘ராயல் என்பீல்டு’ நிறுவனம், அதன் ‘கிளாஸிக் 350’ எனும் மோட்டார் சைக்கிள் தயாரிப்பில், பிரேக் பாகத்தில் சில பிரச்னைகள் இருப்பதாக கூறி, 26 ஆயிரத்து, 300 மோட்டார் சைக்கிள்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் முதல் தேதியிலிருந்து, டிசம்பர் 5ம் தேதி வரையிலான காலத்தில் தயாரிக்கப்பட்ட பைக்குகளை, இந்நிறுவனம் திரும்ப பெறுகிறது.
‘டொயோட்டா’ விற்பனை எதிர்பார்ப்பு
‘டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்’ நிறுவனம், நடப்பு ஆண்டில் மொத்த விற்பனை, 60 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
தேவைகள் அதிகரித்திருப்பதை அடுத்து, இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் நடப்பு ஆண்டில் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
எலானுக்கு அதிக வரி
மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான ‘டெஸ்லா’வின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், நடப்பு ஆண்டில் 83 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் கூடுதலாக வரி செலுத்த வேண்டியதிருக்கும் என தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் உலகின் முதல் பணக்காரராக உள்ளார். அவரது டெஸ்லா நிறுவனத்தின் மதிப்பு, ௧ லட்சம் கோடி டாலருக்கும் அதிகமாகும். இந்திய மதிப்பில் இது, 76 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
வாகன தகர்ப்பில் ‘மகிந்திரா’
‘மகிந்திரா’ குழுமத்தை சேர்ந்த ‘மகிந்திரா எம்.எஸ்.டி.சி., ரீசைக்கிளிங்’ நிறுவனம், வாகன தயாரிப்பு நிலையங்களை அமைக்க, மஹாராஷ்டிரா அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆண்டுக்கு 40 ஆயிரம் வாகனங்களை தகர்க்கும் வலிமை படைத்ததாக இந்த வாகன தகர்ப்பு நிலையங்கள் இருக்கும் என்றும், மகிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி
பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, ‘இக்ஸிகோ, சகஜானந்த் மெடிக்கல் டெக்னாலஜிஸ், கெவென்டர் அக்ரோ’ என, மூன்று நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு அனுமதி வழங்கி உள்ளது.
இக்ஸிகோ பயணங்களுக்கான சேவையை வழங்கி வருகிறது. இதய அடைப்பை தவிர்க்கும் ‘ஸ்டென்ட்’ தயாரிப்பில் சகஜானந்த் மெடிக்கல் டெக்னாலஜிஸ் ஈடுபட்டுள்ளது. கெவென்டர் அக்ரோ, உணவு மற்றும் பானங்கள் துறையை சேர்ந்த நிறுவனமாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|