பதிவு செய்த நாள்
21 டிச2021
10:05
புதுடில்லி : சந்தை போட்டிகள் ஆணையம், 'அமேசான்' நிறுவனத்துக்கும், 'பியூச்சர் கூப்பன்ஸ்' நிறுவனத்துக்கும் இடையேயான ஒப்பந்தத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை நிறுத்தி வைத்துள்ளது.மேலும், அமேசான் நிறுவனத்துக்கு, 202 கோடி ரூபாய் அபராதமும் ஆணையம் விதித்துள்ளது.
இதையடுத்து, பியூச்சர் குழுமத்தை சேர்ந்த அனைத்து நிறுவனங்களின் பங்குகளும், நேற்றைய வர்த்தகத்தின் இடையே அதிகபட்ச விற்பனை வரம்பை எட்டின. அனைத்து நிறுவன பங்குகளும் கிட்டத்தட்ட 20 சதவீதம் வரை விலை அதிகரித்தன.பியூச்சர் குழுமத்துக்கும், அமேசான் நிறுவனத்துக்கும் இடையேயான 2019ம் ஆண்டில் போடப்பட்ட ஒப்பந்தம் குறித்து முழுமையான, தெளிவான தகவல்களை, அமேசான் வழங்க தவறிவிட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
முகேஷ் அம்பானி தலைமையிலான 'ரிலையன்ஸ் ரீடெய்ல் வெஞ்சர்ஸ்' நிறுவனம், பியூச்சர் குழுமத்தின் சில்லரை வணிகத்தை 24 ஆயிரத்து, 713 கோடி ரூபாய்க்கு வாங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதை வாங்கும் வாய்ப்பை மறுக்கும் முதல் உரிமை தனக்கு தான் உண்டு என, அமேசான் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில் அமேசானுக்கும், பியூச்சர் நிறுவனத்துக்கும் இடையேயான ஒப்பந்தத்துக்கான அனுமதியை நிறுத்தி வைப்பதாக, ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|