'அமேசான்' நிறுவனத்துக்கு ரூ.202 கோடி அபராதம் 'அமேசான்' நிறுவனத்துக்கு ரூ.202 கோடி அபராதம் ...  இதுவரை இல்லாத அளவுக்கு  நிறுவன இணைப்பு  அதிகரிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு நிறுவன இணைப்பு அதிகரிப்பு ...
ஓ.டி.டி., பார்வையாளர்கள் பெண்களை விஞ்சிய ஆண்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2021
19:59

புதுடில்லி:இந்தியாவில் ஓ.டி.டி., தளத்தின் வாயிலாக, திரைப்படங்கள், சீரியல்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பவர்கள் எண்ணிக்கை, 35 கோடியிலிருந்து 50 கோடி வரை அதிகரிக்கும் என, ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
அத்துடன், ஆண் பார்வையாளர்கள் எண்ணிக்கை, பெண்களை விட இருமடங்கு அதிகரித்துள்ளதும் ‘பெட்வே இன்சைடர்’ எனும் நிறுவனத்தின் ஆய்வின் வாயிலாக தெரியவந்துள்ளது.
அண்மைக்காலமாக, இந்தியாவில், ‘அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார்’ என ஓ.டி.டி., தளங்கள் வாயிலாக வீடியோக்கள் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது 2023ல், 35_50 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.நாட்டில், 15 வயதிலிருந்து 30 வயது வரையிலான இளவயதினரே ஓ.டி.டி., தளங்களை அதிகம் பார்க்கிறார்கள்.
பெண்களை பொறுத்தவரை 25 – 35 வயது பிரிவினர் அதிகம் பார்வையிடுகிறார்கள். இருப்பினும் மொத்த நுகர்வில், ஆண்களை விட பெண்கள் 50 சதவீதம் குறைவாகவே இருக்கின்றனர்.கொரோனா காலத்தில், ஓ.டி.டி., பார்வையாளர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
‘டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்’ சந்தாதாரர்கள் எண்ணிக்கை 4.3 கோடியாக உள்ளது. இதை அடுத்து, அமேசான் பிரைம் 1.7 கோடி சந்தாதாரர்களையும், நெட்பிளிக்ஸ் 50 லட்சம் சந்தாதாரர்களையும் கொண்டிருக்கின்றன.ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் அதிகரிப்பு, கிராம பகுதிகளிலும் வேகமான இன்டர்நெட் வசதி ஆகியவை காரணமாக, ஓ.டி.டி., பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)