இதுவரை இல்லாத அளவுக்கு  நிறுவன இணைப்பு  அதிகரிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு நிறுவன இணைப்பு அதிகரிப்பு ...  ஜே.எஸ்.டபுள்யு., சிமென்டில் எஸ்.பி.ஐ., ரூ.100 கோடி முதலீடு ஜே.எஸ்.டபுள்யு., சிமென்டில் எஸ்.பி.ஐ., ரூ.100 கோடி முதலீடு ...
சமையல் எண்ணெய் விலை சரியும்:பாமாயில் இறக்குமதி வரி குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2021
20:05

புதுடில்லி:பாமாயில் மீதான இறக்குமதி வரியை 17.5 சதவீதத்திலிருந்து, 12.5 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது,
மத்திய அரசு.அண்மைக்காலமாக, சமையல் எண்ணெய்களின் விலை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், பாமாயில் மீதான அடிப்படை சுங்க வரியை, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை, 17.5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக குறைத்துள்ளது, மத்திய அரசு.
இதையடுத்து, இதர வரிகள் சேர்த்து, சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலின் இறக்குமதி வரி 19.25 சதவீதத்திலிருந்து 13.75 சதவீதமாக குறையும்.வரி குறைக்கப்பட்டதை அடுத்து, இறக்குமதி அதிகரித்து, எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.வரி குறைப்பை அறிவித்ததுடன் மட்டுமில்லாது, சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை, வர்த்தகர்கள் அடுத்த ஆண்டு டிசம்பர் வரையிலான ஓராண்டு காலத்துக்கு, உரிமம் இல்லாமல் இறக்குமதி செய்து கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.
சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்துவதற்காக, இவ்வாண்டில் பல முறை கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான வரி குறைத்து அறிவிக்கப்பட்டது. கடைசியாக, கடந்த அக்டோபர் 14ம் தேதி இறக்குமதி வரி குறைக்கப்பட்டது.
சமையல் எண்ணெய்களை பொறுத்தவரை, இந்தியா பெரும்பாலும் இறக்குமதியையே சார்ந்துள்ளது. நாட்டின் சமையல் எண்ணெய் மொத்த நுகர்வில் 65 சதவீதம், இறக்குமதியை சார்ந்தே உள்ளது. கிட்டத்தட்ட 1.3 – 1.5 கோடி டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப் பட்டு வருகிறது.நாட்டின் மொத்தவிலை பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, இறக்குமதி வரியை குறைப்பது உள்ளிட்ட பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)