பதிவு செய்த நாள்
21 டிச2021
20:05
புதுடில்லி:பாமாயில் மீதான இறக்குமதி வரியை 17.5 சதவீதத்திலிருந்து, 12.5 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது,
மத்திய அரசு.அண்மைக்காலமாக, சமையல் எண்ணெய்களின் விலை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், பாமாயில் மீதான அடிப்படை சுங்க வரியை, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை, 17.5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக குறைத்துள்ளது, மத்திய அரசு.
இதையடுத்து, இதர வரிகள் சேர்த்து, சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலின் இறக்குமதி வரி 19.25 சதவீதத்திலிருந்து 13.75 சதவீதமாக குறையும்.வரி குறைக்கப்பட்டதை அடுத்து, இறக்குமதி அதிகரித்து, எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.வரி குறைப்பை அறிவித்ததுடன் மட்டுமில்லாது, சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை, வர்த்தகர்கள் அடுத்த ஆண்டு டிசம்பர் வரையிலான ஓராண்டு காலத்துக்கு, உரிமம் இல்லாமல் இறக்குமதி செய்து கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.
சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்துவதற்காக, இவ்வாண்டில் பல முறை கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான வரி குறைத்து அறிவிக்கப்பட்டது. கடைசியாக, கடந்த அக்டோபர் 14ம் தேதி இறக்குமதி வரி குறைக்கப்பட்டது.
சமையல் எண்ணெய்களை பொறுத்தவரை, இந்தியா பெரும்பாலும் இறக்குமதியையே சார்ந்துள்ளது. நாட்டின் சமையல் எண்ணெய் மொத்த நுகர்வில் 65 சதவீதம், இறக்குமதியை சார்ந்தே உள்ளது. கிட்டத்தட்ட 1.3 – 1.5 கோடி டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப் பட்டு வருகிறது.நாட்டின் மொத்தவிலை பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, இறக்குமதி வரியை குறைப்பது உள்ளிட்ட பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|