பதிவு செய்த நாள்
21 டிச2021
20:10
புதுடில்லி:மின்னணு வர்த்தக நிறுவனமான ‘ஸ்நாப்டீல்’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.
இந்நிறுவனம், ‘சாப்ட்பேங்க்’ குழுமத்தின் பின்னணியில் இயங்கி வருகிறது. புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக ஸ்நாப்டீல் 1,250 கோடி ரூபாய் திரட்ட உள்ளது.இதன் நிறுவனர்களான குணால் பால் மற்றும் ரோஹித் பன்சால் ஆகியோர், தங்கள் வசம் இருக்கும் பங்குகள் எதையும் இந்த பங்கு வெளியீட்டின் போது விற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திரட்டப்படும் நிதியை கொண்டு, நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும், சரக்கு வினியோக மேம்பாட்டுக்காகவும், தொழில்நுட்ப மேம்பாட்டுக்காகவும் செலவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
அண்மைக்காலமாக, இணைய அடிப்படையில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் பல, புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன. ‘ஸொமாட்டோ, நைக்கா, பேடிஎம், பாலிசிபஜார்’ போன்ற நிறுவனங்களின் வரிசையில், தற்போது ஸ்நாப்டீல் நிறுவனமும் இணைந்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|