பதிவு செய்த நாள்
22 டிச2021
21:17
புதுடில்லி:பிரியாணியின் மீதான இந்தியர்களின் அலாதி பிரியம், ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருகிறது. நடப்பு ஆண்டில், ஒரு நிமிடத்துக்கு 115 பிரியாணி என்ற ரேஞ்சில் ஆர்டர் செய்திருக்கிறார்கள்.
உணவு வினியோக நிறுவனமான ‘ஸ்விக்கி’ நடப்பு ஆண்டில் பெறப்பட்ட ஆர்டர்கள் குறித்த அதன் ‘ஸ்டாட்ஈட்டிக்ஸ்’ எனும் அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளது.இந்நிறுவனம், கடந்த 6 ஆண்டுகளாக இந்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான வெளியிட்ட அறிக்கை:
கடந்த 2020ம் ஆண்டை விட, நடப்பு ஆண்டில் பிரியாணிக்கான ஆர்டர்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டில் நிமிடத்துக்கு 90 ஆர்டர்கள் பெறப்பட்ட நிலையில், இந்த ஆண்டில், நிமிடத்துக்கு 115 ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளன.கிட்டத்தட்ட நொடிக்கு இரண்டு பிரியாணி என வினியோகிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாகவே பிரியாணிக்கு தான் முதலிடம். அதிலும், சிக்கன் பிரியாணிக்கான ஆர்டர்கள் அதிகம்.
வெஜிடபிள் பிரியாணியுடன் ஒப்பிடும்போது, சிக்கன் பிரியாணிக்கு 4.3 மடங்கு அதிக ஆர்டர் வந்துள்ளது.சிற்றுண்டியை பொறுத்தவரை, முதலிடத்தை சமோசா பிடித்துள்ளது. கிட்டத்தட்ட 50 லட்சம் ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளன.
இதற்கு அடுத்த இடத்தை, பாவ் பாஜியும், குலோப் ஜாமுனும் பிடித்துள்ளன. தலா 21 லட்சம் ஆர்டர்கள். நடப்பு ஆண்டில் மட்டும் 14 லட்சம் இன்ஸ்டன்ட் நுாடுல்ஸ், 31 லட்சம் சாக்லெட் பாக்கெட்டுகள், 23 லட்சம் ஐஸ்கிரீம்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன.
கொரோனா காலத்தில், ஸ்விக்கி வாயிலாக, 1 லட்சம் முக கவசங்கள், 4 லட்சம் சோப்புகள், ஹேண்ட் வாஷ்கள், 70 ஆயிரம் பேண்டு எய்டுகள், 55 ஆயிரம் டயாப்பர்கள் மற்றும் 3 லட்சம் சானிட்டரி நாப்கின்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|